கொரோனாவுக்கு எதிரான இரு வகை தடுப்பூசிகளுக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்திருப்
பதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை அங்கு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க உள்ளது.
தடுப்பூசி மருந்து செலுத்தப்படு வது இந்தியாவை சிரமத்தில் இருந்து மீட்கும் என்றும் விரைவிலேயே கொவிட்-19 கிருமித்தொற்று அற்ற நாடு என இந்தியா மாறும் என்றும் அந்நாட்டு சுகாதார, குடும்பநல துணை அமைச்சர் அஷ்வினி குமார் செளபே தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நேற்று தமது டுவிட்டரில் விளக்கம் அளித்த அவர், "கோவாக்சின், கொவிஷீல்ட் என்னும் இருவகையான தடுப்பூசி மருந்துகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துவிட்டது.
"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் இது ஒரு முக்கிய சாதனை," என்றார் அவர்.
தடுப்பூசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளையும் சுகாதாரத் துறை பணியாளர்
களையும் பாராட்டிய அமைச்சர், இந்தியா வெகுவிரைவில் கொரோனா பிடியிலிருந்து முழுமையாக விலகும் என்றார்.
சீரம், பாரத் பயோடெக் தயாரிப்புகளின் தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ள இந்தியா, கெடிலா சுகாதாரப் பராமரிப்பு நிறுவனம் பரிசோதித்து வரும் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது.
இன்னும் ஒரு மாத காலத்தில் நான்கு வகையான தடுப்பூசிகள் இந்தியாவில் உள்ள மக்களுக்குப் போடப்படும் என்று ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இந்தியாவில் கிருமிப் பரவல் மட்டுப்பட்டு வருகிறது. 2020 செப்டம்பர் மாதம் உச்சத்தில் இருந்த அதன் எண்ணிக்கை பின்னர் படிப்
படியாகக் குறையத் தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி அங்கு பத்து மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டிசம்பர் மாதத்தில் பரவலின் வேகம் குறைந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
எந்தவொரு தடுப்பூசியும் இல்லாத நிலையில் கிருமியின் வேகம் தானாகவே கட்டுப்பட்டு வரும் நிலையில் அங்கு அரசாங்கத்திடமும் பொதுமக்களிடமும் நம்பிக்கை பிறந்து உள்ளது. தடுப்பூசிக்கான அனுமதி அந்த நம்பிக்கையை மேலும் கூட்டி உள்ளது.
கொரோனா பாதிப்பு நில
வரத்தை நேற்றுக் காலை விளக்கிய சுகாதார அமைச்சு, 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,177 என்றும் குண
மடைந்தோர் எண்ணிக்கை 20,000 என்றும் குறிப்பிட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் அன்றாடம் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை சராசரியாக 20,000க்கும் கீழ் குறைந்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன்னால், செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் பரவல் வேகம் அதிகமாகக் காணப்பட்டதால் அந்த மாதத்தின் ஒரு வார கால சராசரி தொற்று எண்ணிக்கை 93,735ஆக இருந்தது.
தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.16 விழுக்காடாகவும் உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 விழுக்காடாகவும் உள்ளது. மேலும், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் 2.39 விழுக்காடு.
உயிரிழப்பு விகிதமும் இந்தியா வில் குறைந்து வருகிறது. இதுவரை அங்கு மரணமடைந்தோர் எண் ணிக்கை 1,49,435. அண்மை நாட் களாக அன்றாட மரணம் 300க்கும் கீழ் பதிவாகி வருகிறது.

