மலேசியா வில் வெள்ளத் தால் பாதிக்கப் பட்டுள்ள ஐந்து மா நிலங்களில் நேற்று நண்பகல் 1 மணி நில வரப்படி கிட்டத்தட்ட 20,000 பேர் நிவா ரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சமூக நல்வாழ்வுத் துறை தெரிவித்தது. ஜோகூரிலும் திரெங்கானுவிலும் வீடுகளைவிட்டு பாதுகாப்பான இடங்களை நாடியோர் எண்ணிக்கை குறைந்துள்ளபோதும் பாகாங், பேராக், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாகாங்கில் பல ஆறுகளில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அம்மாநிலத்தில் மட்டும் 10,739 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.ஜோகூரில் நேற்றுக் காலை நிலவரப்படி 7,112 பேர் நிவாரண மையங்களில் இருந்த நிலையில், பின்னர் அது 6,991ஆகக் குறைந்தது.
"கோத்தா திங்கியில் 20, குளுவாங்கில் 19, ஜோகூர் பாருவில் பத்து, மெர்சிங்கில் ஆறு, கூலாயில் ஐந்து, செகாமட்டிலும் பொந்தியானிலும் தலா மூன்று, பத்து பகாட்டில் இரண்டு என மொத்தம் 68 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன," என்று ஜோகூர் மாநிலத்தின் சுகாதார, சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர்.வித்யாநந்தன் தெரிவித்தார்.
வாகனங்கள் நீரில் மூழ்கியதால் கோத்தா திங்கியில் 12 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, திரெங்கானு, பாகாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இன்று வரை கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

