தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்டியுசி உறுப்பினர்களுக்கு உளவியல், நிதி உதவிகள்

2 mins read
a87e48b3-7f3b-4988-9a0e-0aa270e714c7
என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் (வலமிருந்து 2வது), என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளரும் என்டியுசி பராமரிப்பு மற்றும் பரிவு பிரிவின் இயக்குநருமான ஸைனல் சப்பாரி இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில், 'என்டியுசி கேர்' நிதியைப் பெறும் கரையோரப் பூந்தோட்ட ஊழியர்கள் வோங் வை ஹோங், இஸ்மாயில் பாக்கார் இருவருடன் உரையாடினர். படம்: என்டியுசி -

கொவிட்-19 கொள்­ளை­நோய் மற்­றும் வேலை நிலவரத்தால் மன உளைச்­ச­லுக்கு ஆளான தொழிற்­சங்க உறுப்பினர்களுக்கு உதவ விரை­வில் அவர்­க­ளுக்கு உள­வி­யல்­ சார்ந்த உதவி வழங்­கப்­படும்.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் மற்­றும் தங்­கள் சம்­ப­ளம் குறிப்­பி­டத்­தக்க அளவு குறைக்­கப்­பட்ட தொழிற்­சங்க உறுப்­பி­னர்­க­ளான அவர்­கள் தனித்­த­னி­யாக ஆலோ­சனை சேவை பெறு­வார்­கள் என்­றும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) நேற்று தெரி­வித்­தது.

"வேலை சார்ந்த திடீர் சூழ்­நிலை­யால் அல்­லது கடு­மை­யான கவ­லை­யால் ஊழி­யர்­க­ளின் மன­நிலை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும்.

"குறிப்­பாக, பரா­ம­ரிப்­பா­ளர்­கள் போன்ற சிரமமான தனிப்­பட்ட பொறுப்­பு­களை ஏற்­றி­ருப்­போ­ருக்­கும் மிக இளைய அல்­லது முதிய வய­து­டைய சார்ந்­தி­ருப்­போ­ரைக் கொண்­டி­ருப்­போ­ருக்­கும் இது பெரும் பிரச்­சி­னை­யாக அமைந்­து­வி­டும்.

"இவ்­வாண்­டி­லும் அதற்கு அப்­பா­லும் வெவ்­வேறு துறை­கள் வெவ்­வேறு வேகத்­தில் வளர்ச்சி காணும் என்­ப­தால் இத்­த­கைய கவ­லை­கள் தொட­ரக்­கூ­டும்," என்­றும் என்­டி­யுசி தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

'மைண்ட் கல்ச்­சர்' எனும் உள­வி­யல் நிலை­யத்­து­டன் இணைந்து இத்­திட்­டத்­தில் செயல்­ப­ட­வி­ருக்­கும் என்­டி­யுசி இத்­திட்­டம் பற்றி மேல் விவ­ரங்­கள் வரும் மார்ச் மாதத்­தில் வெளி­யி­டப்­படும் என்­றது.

இந்த ஆலோ­சனை சேவை, 'என்­டி­யுசி-யு கேர்' நிதித் திட்­டம் ஆத­ர­வ­ளிக்­கும் தொடர் உத­வித் திட்­டங்­களில் ஒரு பகு­தி­யா­கும்.

"முன்பு பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யால் பாதிக்­கப்­பட்ட என்­யு­டிசி உறுப்­பி­னர்­க­ளுக்கு உத­வும் பொருட்டு, 2009ஆம் ஆண்­டில் 'என்­டி­யுசி-யு கேர்' நிதித் திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

"அதே­போல் பத்து ஆண்­டு­களுக்­குப் பிறகு, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லால் உரு­வா­கி­யுள்ள சவால்­களை எங்­கள் உறுப்­பி­னர்­கள் சமா­ளிக்க நாங்­கள் எங்­கள் கடப்­பாட்டை முழு­மை­யா­கத் தெரி­வித்­துள்­ளோம்," என்­றார் என்­டி­யு­சி­யின் உத­வித் தலை­மைச் செய­லா­ள­ரும் என்­டி­யுசி பரா­ம­ரிப்பு மற்­றும் பரிவு பிரி­வின் இயக்­கு­நரு மான திரு ஸைனல் சப்­பாரி.

கடந்த ஆண்­டில் இந்­நி­தித் திட்­டத்­துக்­காக கிட்­டத்­தட்ட 100 பேர் நன்­கொடை அளித்­த­னர். அதை­யும் சேர்த்து என்­டி­யுசி தனது குறைந்த வரு­மான உறுப்­பி­னர்­க­ளின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்த $31.5 மில்­லி­யனை செல­வ­ழிக்க கடப்­பாடு கொண்­டுள்­ளது.

கடந்த மாதம் 18ஆம் தேதி வரை கிட்­டத்­தட்ட 33,000 உறுப்­பி­னர்­களுக்கு $16 மில்­லி­யன் மதிப்­பி­லான நிதியை வழங்­கி­யுள்­ளது. அது அவர்­க­ளின் அன்­றாட செலவு­களுக்­கும் பிள்­ளை­க­ளின் பள்ளி சார்ந்த செல­வு­க­ளுக்­கும் பயன்­படுத்­தப்­பட்­டது.

இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் தொடங்­கப்­பட்ட 'என்­டி­யுசி கேர்' நிதி (கொவிட்-19) என்ற திட்­டத்­தின் மூலம் வழங்­கப் பட்­டது.

கொவிட்-19 சூழ்­நி­லை­யால் சம்­ப­ளம் குறைக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­களுக்­குத் தலா $300 ரொக்க உதவி கொடுக்­கப்­பட்­டது என்­றும் என்­டி­யுசி கூறி­யது.