சிங்கப்பூரில் புதிதாக 48 பேருக்கு கொவிட்-19 தொற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இக்கிருமியைத் தொற்றி இங்கு வந்தவர்கள். இவர்கள் அனைவரும் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 48 பேரில் நால்வர் நிரந்தரவாசிகள். 10 பேர் பணிப்பெண்கள். சமூகத்திலோ ஊழியர்கள் தங்கும் விடுதியிலோ புதிய சம்பவங்கள் இல்லை.
மேல் விவரங்கள் இன்றிரவு பகிரப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.