தைப்பூச திருவிழா, இவ்வாண்டு வழக்கத்தைவிட சற்று அமைதியாகவே நடைபெற்றது. கடந்தாண்டு ஜனவரி டோர்ஸ்கான் ஆரஞ்சு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நடந்த தைப்பூசத்தில் குழுமிய கூட்டம் இம்முறை இல்லை.
ஊர்வலம், அலகு காவடி, ஆரவாரம் எதுவுமின்றி பால்குடம் செலுத்த வந்த பக்தர்கள் மட்டும் சந்நிதிக்குள் இன்று காலை நுழைந்தனர். பால்குடம் செலுத்த கிட்டத்தட்ட 50,000 பேர் பதிவு செய்திருந்தனர்.
சமூக இடைவெளி விதிமுறைகளுடன் இத்திருவிழா நடத்தப்பட்டது.
(கூடுதல் செய்திக்காக எங்களுடன் இணைந்திருங்கள்...)

