உத்தரகாண்ட்: பனிச்சரிவால் திடீர் வெள்ளம்; சடலங்கள் மீட்பு

உத்தரகாண்ட்: பனிச்சரிவால் திடீர் வெள்ளம்; சடலங்கள் மீட்பு

2 mins read
0845b0fa-8863-4e9a-8e15-f7c741091714
-

உத்­ த­ர­ காண்ட் மாநிலம், சாமோலி மாவட்­டத்­தில் உள்ள பனி­மலை ஒன்று

நேற்று திடீ­ரென உடைந்­தது. அப்­ப­கு­தி­யில் உள்ள மின்­நி­லை­யம் அருகே பெரிய அள­வில் பனிப்­பா­றை­கள் சரிந்து, வேக­மாக உரு­கின. இத­னால் தவு­லி­கங்கா எனும் நதி­யில் திடீர் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. நேரம் செல்­லச் செல்ல ஆற்­றில் நீர்­மட்­டம் உயர்ந்­து­கொண்டே சென்றது. இத­னால் ஆற்­றின் கரை­யோரம் அமைந்­தி­ருந்த பல வீடு­கள் சேத­மா­ன­தோடு, பலர் மாய­மா­ன­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இச்­சம்­ப­வத்­தில் அங்கு வசித்த, பணி­பு­ரிந்த 100 முதல் 150 பேர் வரை உயி­ரி­ழந்து இருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக உத்­த­ர­காண்ட் மாநி­லத் தலை­மைச் செய­லா­ளர் ஓம் பிர­காஷ் தெரி­வித்­தார்.அரு­கி­லி­ருந்த மின்­நி­லை­யத்­தில் பணி­பு­ரிந்­து­கொண்டு இருந்­த­வர்­களும் அப்­ப­குதி கிராம மக்­களும் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­வதாக இச்­சம்­ப­வத்தை நேரில் கண்ட சஞ்சே சிங் ரானா என்­ப­வர் தொலை­பே­சி­வழி ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

இதை­ய­டுத்து ஆற்­றங்­க­ரை­யோரப் பகு­தி­களில் வசிக்­கும் மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. பொது­மக்­கள் உட­ன­டி­யாக பாது­காப்­பான இடங்­களுக்குச் செல்­லும்­படி சாமோலி மாவட்ட போலிஸ் அறி­வு­றுத்­தி­யது.

பாதிக்­கப்­பட்ட பகு­திக்கு 600 ராணுவ வீரர்­கள் விரைந்­த­தாக ராணுவ அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர். வெள்­ளத்­தில் சிக்­கி­ய­வர்­களை ஹெலி­காப்­டர்­கள் மூலம் மீட்­கும் பணி நடை­பெற்­றது. நேற்று மாலை நில­வ­ரப்­படி பத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் சட­லங்­களாக மீட்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் நிகழ்ந்த பகு­திக்­குச் சென்ற உத்­த­ர­காண்ட் முதல்­வர் திரி­வேந்­திர சிங் ராவத் அங்கு நில­வ­ரத்­தைப் பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார். ராணுவ வீரர்­க­ளி­டம் பாதிப்பு குறித்து கேட்­ட­றிந்­தார்.இச்­சம்­ப­வம் குறித்து டுவிட்­டரில் நேற்று பதி­விட்ட திரு ராவத், "சாமோலி மாவட்­டத்­தில் இயற்­கைப் பேரி­டர் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. களத்­தின் நிலை­மையை சமா­ளிக்க மாவட்ட நிர்­வா­கம், காவல்­துறை மற்­றும் பேரி­டர் மேலாண்மை துறைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

"ஆற்­றின் நீர்­மட்­டம் வழக்­கத்­தை­விட ஒரு மீட்­டர் அதி­க­மாக இருந்­தா­லும் அது படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது. இந்­நி­லை­யில் இச்­சம்­ப­வம் பற்றி எந்­த­வி­த­மான வதந்­தி­க­ளை­யும் நம்ப வேண்­டாம். தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் அரசு எடுத்து வரு­கிறது," என்று தெரி­வித்­துள்­ளார்.