கொவிட்-19 விதிமுறையை மீறிய தாக பிரிட்டிஷ் ஆடவரும் அவரது சிங்கப்பூர் மனைவியும் ஒப்புக்கொண்டனர்.
52 வயது நைஜல் ஸ்கியருக்கு இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரிட்ஸ்-கார்ல்டன் மில்லேனியா சிங்கப்பூரில் தங்க வைக்கப்பட்டனர்.
விதிமுறையின்படி அவர் அறையைவிட்டு வெளியேறக்கூடாது.
ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதியன்று ஹோட்டலின் 14வது மாடியில் இருந்த தமது அறையிலிருந்து அவர் முகக்கவசம் அணியாமல் மூன்று முறை வெளியேறியதாக அறியப்படுகிறது.
அதிகாலை 2.20 மணி அளவில் மூன்றாவது முறையாக அறையிலிருந்து வெளியேறி ஸ்கிய, அதே ஹோட்டலின் 27வது மாடியில் உள்ள அறைக்குச் சென்று அங்கு தங்கியிருந்த தமது காதலியான 39 வயது அகத்தா மகேஷ் ஈயமலையைச் சந்தித்தார்.
ஹோட்டலின் படிகளில் ஏறி அவர் 14வது மாடியிலிருந்து 27வது மாடிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அகத்தாவுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
ஸ்கியரும் அகத்தாவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் நேற்று ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இம்மாதம் 26ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.
பயணிகள் எந்த நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு 14 நாட்கள் அல்லது ஏழு நாட்கள் வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு நிர்ணயிக்கப்படும்.
இந்த உத்தரவை அவர்கள் வீட்டில் அல்லது அரசாங்க கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இடங்களில் நிறைவேற்ற வேண்டும்.