மாணவர் அனைவரும் முன்னேற உதவும் கல்வித் திட்டம் கல்வி அமைச்சர்: அதிக இடங்களை வழங்க தொடக்கநிலை 1 பதிவு மறுஆய்வு

மாணவர் அனைவரும் முன்னேற உதவும் கல்வித் திட்டம் கல்வி அமைச்சர்: அதிக இடங்களை வழங்க தொடக்கநிலை 1 பதிவு மறுஆய்வு

3 mins read

மாண­வர்­க­ளின் கல்­வித் தொடக்­கம் எப்­படி இருப்­பி­னும் அவர்­க­ள் கல்­விப் பய­ணத்­தின் அனைத்து நிலை­க­ளி­லும் முன்­னேற்­றம் காண தொடர்ந்து உதவும் முயற்­சி­களை சிங்­கப்­பூர் தொடர்்ந்து மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

எதிர்­கால வேலை­க­ளுக்கு மாண­வர்­க­ளைத் தயார்­ப்ப­டுத்த தொழில்­நுட்­பக் கல்வி, பல­து­றை­தொ­ழில்­நுட்­பக் கல்­விப் பாதை­களை மறு­ஆய்வு செய்­வ­து­டன் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கப் பட்­ட­தா­ரி­கள் தங்­களை மேம்­ப­டுத்­தும் வழி­களை கல்வி அமைச்சு ஆரா­யும்.

சமூக, நடத்தை சிக்­கல்­க­ளைக் கொண்ட தொடக்­க­நிலை 1 மாண­வர்­க­ளுக்கு உத­வும் திட்­டம் உள்­ளது.

கல்வி அமைச்­சுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட விவாதத்­தில் கலந்துகொண்ட அமைச்­சர் அமைச்­சின் திட்­டங்­களை விவ­ரித்­தார்.

மாண­வர்­க­ளின் கல்­வித் தொடக்­கம் எப்­படி இருந்­தா­லும் அவர்­களை ஏட்­டுக்­கல்­விக்கு அப்­பாற்­பட்ட திறன்­க­ளைப் பெற்­ற­வர்­க­ளாக உரு­வாக்­கு­வ­தும் அவர்­கள் தங்­க­ளது முழுத்­தி­ற­னை­யும் பெற்­று­ வி­ளங்­கச் செய்­வ­துமே வரும் ஆண்­டு­க­ளில் அமைச்­சின் முன்­னு­ரி­மை­க­ளாக இருக்­கும். ஏட்­டுக் கல்­வித் தேர்வு முடி­வு­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளிப்­பதை மறு­ஆய்வு செய்­வ­தற்­கும் பள்­ளி­களில் நீக்­குப்­போக்­கான நடை­மு­றையை அதி­க­ரிப்­ப­தற்­கும் அமைச்சு முக்­கிய மாற்­றங்­க­ளைச் செய்­துள்­ளது என்­றார் திரு வோங்.

இந்த முயற்­சி­க­ளின் மூலம், உயர்­நி­லைக்­குப் பிந்­தைய கல்விப் பாதை­களை அமைச்சு மறு­ஆய்வு செய்து வரு­கிறது என்­றார் அவர்.

எடுத்­துக்­காட்­டாக குறிப்­பிட்ட பட்­ட­யப் படிப்பைத் தீர்­மா­னிப்­ப­தற்கு முன்­னர் மாணவர்­கள் தங்­கள் ஆற்­ற­லைக் கண்­ட­றிய பொது நுழைவுத் திட்­டங்­களை பல­து­றை­தொ­ழில்­நுட்­பக் கல்­லூ­ரி­கள் விரி­வு­ப­டுத்­து­கின்­றன.

முதல் கலைப் பல்­க­லைக்­க­ழ­கம்

உயர்­கல்­வித் துறை­யில் கலை­கள் தொடர்­பான கல்­வியை வலுப்­ப­டுத்­தும் வகை­யில், நன்­யாங் நுண்­க­லைக் கழ­கம், லாசால் கலைக்­கல்­லூரி ஆகி­ய­வற்­றின் இணைப்­பில் முதல் கலைப் பல்­க­லைக்­க­ழ­கம் அமை­யும் என்று அமைச்­சர் லாரன்ஸ் அறி­வித்­தார்.

அடுத்த மூன்று, நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் பல்­க­லைக்­க­ழ­கம் அமைக்­கப்­படும்.

அதன் கட்­ட­மைப்பை உரு­வாக்க, செயற்­குழு ஒன்­றைக் கல்வி அமைச்சு நிய­மிக்­கும்.

இது தனியார் பல்கலைக்கழகமாக இருக்கும். ஆனால் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும். லசால், நாஃபா இரண்டும் தங்கள் சொந்த பாடத் திட்டங்களை வழங்கும். தனித்தன்மையான அடையாளங்களுடன் தனித்துவமான கல்லூரிகளாகவே இவை திகழும் என்றார் அமைச்சர்.

சமூக முன்­னேற்­றத்தை வலுப்­ப­டுத்­து­வதே மற்­றொரு முன்­னு­ரிமை என்­ற திரு வோங், இதற்­காக பள்­ளிக்கு முந்­திய கல்வி, பள்ளி நேரத்­துக்கு பிந்­திய ஈடு­பாடு ஆகி­ய­வற்­றுக்கு வளங்­களை அமைச்சு அளித்­துள்­ளது என்றார்.

மேலும் கற்­றல் பாதை­களை விரி­வு­படுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் பள்­ளிக் கல்­விக்கு அப்­பால், ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் மூலம் தொட­ரும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

"கடந்த காலங்­களில், பெரும்­பா­லோர் கல்­வி­யை­யும் பணி­யி­டத்­தை­யும் இரண்டு தனி உல­கங்­க­ளா­கப் பார்த்­தோம். ஆனால் இது இன்­றைய காலத்­துக்கு பொருந்­தாது," என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

தொடக்­க­நிலை ஒன்றுக்கான பதிவு மறு­ஆய்வு

தொடக்­க­நிலை 1 மாண­வர் பதி­வு முறையில், 2சி கட்டத்­தில் அதிக இடங்­களை ஒதுக்­குவது குறித்து கல்வி அமைச்சு மறுஆய்வு செய்கிறது என்று கல்வி அமைச்சர் வோங் தெரிவித்தார்.

கட்­டம் 2 சி என்­பது தொடக்­க­நிலை 1 பதி­வின் ஏழு கட்­டங்­களில் ஐந்­தா­வது ஆகும்.

இது எந்த வகை­யான முன்­னு­ரிமை சேர்க்­கை­யும் பெறாத­வர்­க­ளுக்­கா­னது. பள்ளி வளா­கத்­திற்கு அரு­கில் வசிப்­ப­வர்­க­ளுக்­கா­னது.

தற்­போ­தைய பதி­வு­மு­றைப்­படி, இந்­தக் கட்­டத்­தின்­கீழ் வரும் மாண­வர்­க­ளுக்கு ஒவ்­வொரு பள்­ளி­யும் 20 இடங்­களை ஒதுக்­கு­கிறது.

அதி­கப் போட்டி நிறைந்த கட்­ட­மாக இது இருப்­ப­தால் பள்­ளி­கள் குலுக்­கல் முறை­யில் மாண­வர்­க­ளைச் சேர்க்க வேண்­டி­யி­ருக்­கிறது.

எனவே, இது மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­வ­தாகக் கூறிய அமைச்­சர், அனைத்து பின்­ன­ணி­களை­யும் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­கும் பள்­ளி­கள் இட­ம­ளிக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தைச் சுட்­டி­னார்.

2சி கட்­டத்­திற்கு மாண­வர் எண்­ணிக்­கையை அதி­க­ரித்­தால் அதற்கு முந்தைய கட்­டங்­களில் போட்டி அதி­க­மா­கும் என்­ப­தைக் கல்வி அமைச்சு அறி­வ­தா­கத் திரு வோங் கூறி­னார்.

சிங்­கப்­பூர் பிள்­ளை­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் அவர்­க­ளின் பள்­ளித் தேர்­வில் சிறந்த வாய்ப்பை வழங்க வேண்­டும், குறிப்­பாக பள்ளி அவர்­க­ளுக்கு வீட்­டுக்கு அரு­கில் இருக்­கும் பட்­சத்­தில்.

அதே­நே­ரத்­தில் தகு­தி­களை அங்­கீ­க­ரித்து சில பிரி­வி­ன­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தி­லும் சம­நிலை காண­வேண்­டும்.

எனவே, இத­னைக் கவ­ன­மா­கக் கையா­ள ­வேண்­டும் என்­றார் திரு வோங்.