இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பீன்ஸ் வாங்கவுள்ளது. அந்நாட்டின் தற்காப்புத் துணை அமைச்சர் ரேமண்ட் எலிஃபாண்டேயும் இந்திய தூதர் ஷாம்பு குமரனும் செவ்வாய்க்கிழமை பிலிப்பீன்ஸ் ஆயுதப்படைத் தலைமையகமான அகுவினாடோமுகாமில் இந்த அமலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பிலிப்பீன்ஸ் தேசிய தற்காப்புத் துறையின் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிடமிருந்து தற்காப்புச் சாதனங்களை வாங்குவது தொடர்பானது.
இந்தியா- ரஷ்யா கூட்டுத்தயாரிப்பான பிரமோஸ், கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நம்பு வதாக பிலிப்பீன்ஸ் தெரிவித்து. இது நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் அல்லது நிலத்திலிருந்து ஏவக்கூடிய நடுத்தர தூர சூப்பர்சோனிக் (ஒலியின் வேகத்தை விட வேகமாக) ஏவுகணை. இது உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையாக கருதப்படுகிறது.