ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக அவதூறு பரப்பியதாக வழக்கறிஞர் ரவி மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திரு ரவியின் ஃபேஸ்புக் பதிவு மீட்டுக்கொள்ளப்பட்டதுடன் அவர் மன்னிப்புக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.
திரு ரவிக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அதற்குப் பதிலாக அவருக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று அரசு தலைமை சட்ட அதிகாரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
திரு ரவியின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு இது குறித்து தீர ஆலோசித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தலைமை சட்ட அதிகாரி அலுவலகம் விளக்கியது.
இதில் தனது ஃபேஸ்புக் பதிவை மீட்டுக்ெகாள்வதுடன், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இனி இதுபோன்ற அவதூறு குற்றச்சாட்டுகளை அமைச்சர் மீது சுமத்துவதில்லை என்றும் வழக்கறிஞர் ரவி உறுதியளித்துள்ளார்.
திரு ரவி மீது சென்ற ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திரு ரவிக்கு இரண்டு ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டுேமா விதிக்கப்படலாம்.
அரசு தலைமை சட்ட அதிகாரி அலுவலகத்தின் அறிக்கையின்படி, திரு ரவி தனது பதிவை பிப்ரவரி 25ஆம் தேதி மீட்டுக்கொண்டார்.
"திரு ரவி எழுத்து மூலமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் இதுபோல் இனி பதிவிடுவது இல்லை என உறுதியும் அளித்தார். அதில் தமது பதிவு பொய்யானது என்றும் அதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்," என அந்த அறிக்கை விளக்கியது.