அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உத்திபூர்வ போட்டி அதிகரித்து வரும் நிலையில் வர்த்தக நிறுவனங்கள் சமூகங்
களுக்கு இடையிலான பாலமாக சேவையாற்றலாம் என துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் இந்த வட்டாரத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை நாடும்போது அதன் தளமாக சிங்கப்பூர் சேவையாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
"உலக அளவிலான பொருள் தருவிப்பு ஆணை பெரும்பாலும் அரசாங்கங்களின் செயல்பாடு
களைப் பொறுத்தே தீர்மானிக்கப்
படுவதால் நாடுகள், சமூகங்கள், வெவ்வேறு கலாசாரங்கள் ஆகியவற்றின் பாலமாக வர்த்தக உலகம் அமையலாம்," என்றார் திரு ஹெங்.
நாடுகள் உட்புற மாற்றம் கண்டு வரும் வேளையில் உலகமயத்தை தொடர்ந்து கட்டிக்காப்பதில் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சொன்னார்.
"தற்போதைய வர்த்தகமுறையை உருமாற்றம் செய்வதற்குரிய ஆக்க கரமான முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் அந்நிறுவனங்கள் தங்களது பங்கை ஆற்ற முடியும்.
"எல்லாத்தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான சச்சரவு தீர்வுக்குரிய வழிமுறைகளுடன், திடமான விதிகளின் அடிப்படையில் அமைந்த புதிய முறையை உருவாக்கும் முயற்சிகளையும் ஆதரிப்பதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பான பங்கை வகிக்கலாம்," என்றார் துணைப் பிரதமர்.
சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த ஆசிய பசிபிக் வர்த்தக மாநாட்டில் அவர் பேசினார். அமெரிக்காவில் இருந்தும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இருந்தும் வர்த்தகத் தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை நிபுணர்கள் போன்றோர் இதில் கலந்துகொண்டனர்.
மரினா பே சேண்ட்ஸில் தொடங்கிய இந்த மூன்று நாள் மாநாடு நாளை நிறைவுறும். நேரடியாகவும் காணொளி வழியாகவும் பங்கேற்கும் பல்வேறு நிகழ்வு களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அரசாங்கக் கொள்கைகளும் தொழில் நிறுவனங்களும் எவ்வாறு மாற்றம் பெறலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உருமாற்றம் பெறுவது தொடர்பான தலைப்புகளில் பலர் உரையாற்றுவர்.
திரு ஹெங் தமது உரையின் போது ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய மூன்று சவால்களைப் பட்டியலிட்டார்.
அத்துடன் அவை வளர்ச்சிபெற சாத்தியமுள்ள பகுதிகளை அவர் அடையாளம் காட்டினார்.
"முதலாவதாக, கொவிட்-19 மாற்றிவிட்ட முன்னேற்றப் பாதையின் நிச்சயமற்ற நிலவரம். இந்த வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் கிருமிப் பரவல் முறி யடிப்பில் திறம்பட செயல்பட்டாலும் நெருக்கடியிலிருந்து மீள தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தில் அவை உள்ளன.
"ஒவ்வொரு பகுதியிலும் கொள்ளைநோய் ஒழிக்கப்படும் வரை அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாது.
"அமெரிக்க-சீன உத்திபூர்வ போட்டித்தன்மை நீடிப்பது இரண்டாவது சவால்.
"இந்த இருதரப்பு உறவில் பைடன் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் எதிர்பார்க்கும் பலனை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன் எஞ்சிய ஆசிய வட்டாரத்திலும் அமெரிக்காவின் ஈடுபாடு அவசியமானது.
"மூன்றாவது சவாலாக உலகளவிலான கடன் நிலவரம் தோன்று கிறது. இந்தக் கடன் எந்த ஒரு கட்டத்திலும் திருப்பித் தரப்பட வேண்டியது. இதில் நாம் கவனத்துடன் செயல்படாவிடில் பணவீக்கத்தை கடன்சுமை பெரிது
படுத்திவிடும்.
"அதன் தொடர்ச்சியாக, புதிய வாய்ப்புகளையும் நீடித்திருக்கக்கூடிய முதலீடுகளையும் பெற்றுத்
தரக்கூடிய பொருளியல் பாதிக்கப்படும்," என்று விவரித்தார் திரு ஹெங்.

