மியன்மாரிலிருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை அண்மைய நாட்களாக அதிகரித்து வருகிறது. இரு நாடு
களின் எல்லை மாநிலமான மிசோரம் வழியாக உள்ளே நுழையும் அவர்களுக்கு தற்காலிகப் புகலிடமும் உணவும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஸோரம்தங்கா தெரிவித்துள்ளார். அகதிகளாக வருவோர் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் முடிவெடுக்கும் வரை இந்த மனிதாபிமான உதவிகள் தொடரும் என்றார் அவர்.

