ஊழியர் மேம்பட முதலிடுக கொவிட்-19 பாதிப்புகளை சமாளித்து வலுவாக மீண்டெழ நிறுவனங்களுக்கு வலியுறுத்து

ஊழியர் மேம்பட முதலிடுக கொவிட்-19 பாதிப்புகளை சமாளித்து வலுவாக மீண்டெழ நிறுவனங்களுக்கு வலியுறுத்து

2 mins read

பொரு­ளி­யல் மீட்சி ஏற்ற இறக்­க­மாக இருக்­கிறது. ஆற்­றல்­மிக்­க­வர்­க­ளைக் கவர்ந்து ஈர்க்க உல­க­ள­வில் போட்டி கடு­மை­யாகிறது. இந்­தச் சூழ்­நி­லை­யில் நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளின் ஆற்­றல் மேம்­பட முத­லீடு செய்ய வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கி­றார்.

காலத்­திற்­கேற்ப உரு­மா­றிக்­கொண்டு, இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் வலு­வாக கொவிட்-19 பாதிப்­பு­களில் இருந்து மீண்டுவர ஏது­வாக நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளின் ஆற்­றல் மேம்­பட முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

சாவ் பாவ் சிங்­கப்­பூர் வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2021 வணி­கக் கருத்­த­ரங்கு நேற்று நடந்­தது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய நிதி அமைச்­ச­ரு­மான திரு ஹெங், நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் அணுக்­க­மா­கச் சேர்ந்து செயல்­ப­டக்­கூ­டிய வழி­க­ளைக் கோடி­காட்­டி­னார். 'ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் இயக்­கத்­திற்­கான செயற்­கூட்­டணி' களில் சேர்­வது முத­லா­வது வழி. அந்த அணி­கள், தொழில்­துறை மற்­றும் சமூ­கத்­தின் ஒட்டு­மொத்த பலத்தை வலுப்­ப­டுத்தி பிரச்­சி­னை­க­ளுக்­குச் செம்­மை­யாகத் தீர்வு காண முடி­யும்.

"நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளு­டன் நீண்­ட­கால உற­வு­களைக் கருத்­தில்­கொண்டு ஊழி­யர்­க­ளின் தேர்ச்­சி­களை மேம்­படுத்தி, உற்­பத்­தித் திற­னைப் பெருக்க வேண்­டும். இவற்­றின் விளை­வாக தொழில்­து­றை­கள் அதிக போட்­டித்­தி­ற­னு­டன் திக­ழும்," என்று அவர் கூறி­னார்.

உள்­ளூர் திற­மை­யா­ளர்­களைச் சிறந்த முறை­யில் உரு­வாக்க வேண்­டும் என்று கூறிய அவர், சிறப்புத் தேர்ச்­சி­ பெற்ற வெளி­நாட்­டி­ன­ரை­யும் நாம் கவர்ந்து ஈர்க்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டார். நிறு­வ­னங்­கள் சமூ­கத்­திற்கு உதவ வேண்­டும் என்­றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொரு­ளி­யல் நிச்­ச­ய­மில்­லாத நிலை, அமெ­ரிக்கா-சீனா பதற்­றங்­கள், அமெ­ரிக்­கா­வின் S$2.6 டிரில்­லி­யன் கொவிட்-19 மீட்­சித் திட்­டம், சீனா­வின் பொரு­ளி­யல் உத்தி, ஆசி­யான் உள்­ளிட்­டவை பற்­றி­யும் அவர் கருத்­து­ரைத்­தார்.

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்கும் முறை பற்றி கருத்துக் கூறிய துணைப் பிர­த­மர், அத்­த­கைய ஒரு முறை சிங்­கப்­பூரை பொறுத்­த­வரை சாத்­தி­ய­மா­ன­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது என்றார்.

"இப்­போது ஆற்­றலை பேணி வளர்ப்­ப­து­தான் மிக முக்­கி­ய­மானது. நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளின் தேர்ச்­சி­கள் மேம்­பட ஆத­ரவு அளிக்­கும்.

"சிங்­கப்­பூர் ஐக்­கி­ய­மாக, வலு­வாக மீண்­டெழ ஒவ்­வொரு நிறு­வ­ன­மும் வர­வு­செ­ல­வுத் திட்ட நட­வ­டிக்­கை­களை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்­திக்கொள்­ளும்," என்று தான் நம்­பு­வ­தாகத் திரு ஹெங் கூறி­னார்.

பசுமைக்கு மாறுக

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த அணுகு­மு­றை­யைக் கைக்­கொள்வது, சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் போட்­டித்­தி­ற­னு­டன் திகழ உத­வும் என்று கூறி­ய துணைப் பிரதமர், அரசு­த் திட்­டங்­க­ளின் அனு­கூலத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு முன்­னே­றும்­படி உள்­ளூர் நிறு­வ­னங்­களை வலி­யு­றுத்­தி­னார்.