வெளிநாடு செல்வோர் முன்னதாகவே தடுப்பூசி போடக் கோரி விண்ணப்பிக்கலாம்

வெளிநாடு செல்வோர் முன்னதாகவே தடுப்பூசி போடக் கோரி விண்ணப்பிக்கலாம்

1 mins read

சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் 'தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளுக்­காக' தங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே தடுப்­பூசி போடக் கோரி விண்­ணப்­பிக்­க­லாம் என்று சுகா­தார அமைச்சு கூறியுள்ளது.

கல்வி, வேலை, தங்­க­ளது அல்­லது குடும்ப உறுப்­பி­ன­ரின் மருத்­துவ சிகிச்சை போன்ற அவ­ச­ர­ கார­ணங்­க­ளுக்காக தங்­க­ளுக்கு முன்­கூட்­டியே தடுப்­பூசி போடக் கோரி வரும் விண்­ணப்­பங்­களை அமைச்சு பரி­சீ­லிக்­கும்.

அப்­படி விண்­ணப்­பிப்­போர், தங்­க­ளுக்­கான தடுப்­பூசி நட­வடிக்கை நிறை­வு­பெ­றும் வரை சிங்­கப்­பூ­ரில் இருப்­பதை உறு­தி­செய்­து­கொள்ள வேண்­டும். அதா­வது, வெளி­நாட்­டிற்­குக் கிளம்­பும் நாளுக்­குக் குறைந்­தது எட்டு வாரங்­களுக்குமுன் அவர்­கள் விண்­ணப்­பிக்க வேண்­டும்.

இப்­போ­தைக்கு, மூன்று முதல் நான்கு வார கால இடை­வெ­ளிக்­குள் இருமுறை தடுப்­பூ­சி­ போடப்­படும். இரண்­டாம் முறை தடுப்­பூசி போட்ட பிறகு, அது முழுச் செயல்­தி­றனை எட்ட மேலும் இரு வாரங்­கள் ஆகும். மேல்­வி­வ­ரங்களுக்கு https://www.vaccine.gov.sg/appeal எனும் இணை­யப்­ பக்கத்தை நாட­லாம்.