இந்தியாவின் கொரோனா கிருமித்தொற்று நிலவரம் மீண்டும் உச்சக்கட்டத்தை நெருங் காமல் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு பிர தமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"சில மாநிலங்களில் வேகமடைந்து வரும் பரவலை நாம் கட்டுப்படுத்தத் தவறினால் பின்னர் நாடளாவிய பரலாக அது உருவெடுத்துவிடும். எனவே இரண்டாவது உச்சக்கட்ட நிலையை கிருமிப் பரவல் அடைந்துவிடாமல் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தேவைப்படும் பெரிய அளவிலான, இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டும்.
"கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நாம் காட்டி வரும் தன்னம்பிக்கை, நாம் மீண்டுவிட்டோம் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையாக மாறிவிடக்கூடாது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் மக்கள் பீதியடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிருமிப் பரவலை முன்கூட்டியே கண்டறிவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்வதோடு தடுப்பூசிகளை அதிகளவில் போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
"சிறு நகரங்களிலும் அதிகக் கவனம் செலுத்தி கிருமி பரவாத வண்ணம் தடுக்கப்பட வேண்டும். தொற்று நிலவரம் மோச
மடைந்த முதற்கட்டத்தில் தப்பித்த இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள்கூட தற்போது பாதிக்கப்பட்டு வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று விளக்கினார் இந்தியப் பிரதமர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா கிருமி பரவத் தொடங்கியது. ஒவ்வொரு மாநிலமும் பாதிக்கப்பட்டு மோசமான நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதையும் முடக்கி வைக்க அப்போது பிரதமர் மோடி உத்தரவிட்டார். 2020 செப்டம்பரில் தொற்று நிலவரம் உச்சமடைந்து பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன. ஆயினும், இவ்வாண்டு தொடங்கியது முதல் சில மாநிலங்களில் கிருமிப் பரவல் மீண்டும் வேகமெடுத்தது. மகாராஷ் டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியா முழுவதும் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதம் 8,000க்கும் கீழ் குைறந்திருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 25,000க்கும் மேல் அதிகரித்து வருகிறது.
சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, நேற்றுக் காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை. நாடு முழுவதும் ஏற்கெனவே 11.44 மில்லியன் மக்களை கிருமி தொற்றிவிட்ட நிலையில் மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. புதிதாக 188 பேர் மாண்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இரு மாதங்களில் இதுவே அதிகமான மரண எண்ணிக்கை. கிட்டத்தட்ட கடந்த ஆண்டின் நிலவரத்தைப்போலவே கிருமிப் பரவல் நிலவரம் உருவெடுத்து வருகிறது. எனவே, அவசர நடவடிக்கைகளை அடையாளம் காணும் நோக்கில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

