தினமும் 20,000 பேருக்கு தொற்று: வெளிநாட்டினர் உள்ளே வர பிலிப்பீன்ஸ் தடை

தினமும் 20,000 பேருக்கு தொற்று: வெளிநாட்டினர் உள்ளே வர பிலிப்பீன்ஸ் தடை

1 mins read

கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் பிலிப்­பீன்­சி­லும் மோச­ம­டைந்து வரு­கிறது. அங்கு தின­மும் பதி­வாகும் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை கடந்த நான்கு நாட்­க­ளாக 20,000 என்ற அள­வில் நீடிக்­கிறது. அத­னால் நாடு பெரிய அள­வி­லான முடக்­கத்­திற்­குத் திட்­ட­மி­டு­வது தவிர்க்க முடி­யா­தது என்று பிலிப்­பீன்ஸ் சுகா­தார அமைச்­சர் நேற்று தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு கொரோனா கிருமி வேக­மா­கப் பர­வி­ய­போது கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை பிலிப்­பீன்ஸ் அமல்­ப­டுத்­தி­யது. உல­க­ள­வில் நீண்ட கால முடக்­கத்தை அறி­வித்த நாடு­க­ளின் வரி­சை­யில் அந்­நா­டும் இடம்­பி­டித்­தது. இன்று வரை அங்கு பள்­ளிக்­கூ­டங்­கள் மூடப்­பட்­டுள்­ளன. ஒரு வட்­டா­ரத்­தி­லி­ருந்து இன்­னொரு வட்­டா­ரத்­திற்­குள் நுழை ­வ­தற்­கான தடை­யும் நீடிக்­கிறது.

இத்­த­கைய கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக படிப்­ப­டி­யா­கக் கட்­டுக்­குள் வந்த தொற்று நில­வ­ரம் தற்­போது மீண்­டும் விஸ்­வ­ரூ­பம் எடுத்து வரு­கிறது.

அத­னால் மறு­ப­டி­யும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்

­ப­டுத்த பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் வேக­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது. அதன் தொடக்­க­மாக, நாளை மறு­தி­னம் (மார்ச் 20) முதல் வெளி­நாட்­டுப் பய­ணி­கள் பிலிப்­பீன்­சுக்­குள் நுழைய தடை விதிக்­கப்­ப­டு­கிறது. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நாடு திரும்­பும் பிலிப்­பீன்ஸ் குடி­மக்­கள் மட்­டுமே உள்ளே வர­லாம். அவர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் நாள் ஒன்­றுக்கு 1,500 என வரம்பு விதிக்­கப்­பட்­டுள்­ளது.