$940 மி. சம்பள உதவித்தொகை

$940 மி. சம்பள உதவித்தொகை

3 mins read

இம்மாத இறுதிக்குள் 98,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்

சம்­பள உத­வித்­தொ­கை திட்­டத்­தின்­கீழ் இம்­மாத இறு­திக்­குள் 98,000க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களுக்கு மொத்­தம் $940 மில்­லி­யன் உத­வித்­தொகை வழங்­கப்­ப­ட­ உள்­ளது. இத­னு­டன் சேர்த்து, கொவிட்-19 நோய்ப் பர­வல் கால­கட்­டத்­தில் சம்­பள உத­வித்­தொகை­யாக $2 பில்­லி­ய­னுக்கு மேல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா பர­வ­லைச் சமா­ளிக்­க­வும் பொரு­ளி­யலை, நிறு­வ­னங்­களை உரு­மாற்­ற­வும் அர­சாங்­கம் எல்லா முயற்­சி­களையும் எடுத்து வரும் நிலை­யில், ஊழி­யர்­கள் மேம்­பாடு அதன் மைய­மா­கத் திகழ்­கிறது என்று துணைப் பிர­தமர் ஹெங் சுவீ கியட் தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யாக நேற்று தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்­குச் சம்­பள உயர்வு வழங்க நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தன்­மூ­லம் நமது ஊழி­யர்­க­ளைக் கைதூக்­கி­வி­டும் வழி­களில் ஒன்­றாக சம்­பள உத­வித்­தொ­கைத் திட்­டம் திகழ்­கிறது," என்று திரு ஹெங் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஊழி­யர்­க­ளின் சம்­பள உயர்­விற்­கான இணை­நி­தியை சம்­பள உத­வித்­தொ­கைத் திட்­டம் அளிக்­கிறது. கடந்த 2013ஆம் ஆண்­டில் மூன்­றாண்டு திட்­ட­மாக அறி­முகப்­ப­டுத்­தப்­பட்ட இத்­திட்­டம், பின்­னர் 2020 வரை நீட்­டிக்­கப்­பட்­டது. இவ்­வாண்­டிற்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை தாக்­க­லின்­போது, அது மேலும் ஓராண்­டிற்கு நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

2019ஆம் ஆண்­டில் 20 விழுக்­கா­டும் 2020ல் 15 விழுக்­கா­டும் இணை­நிதி வழங்­கப்­பட்­டது. அத்­து­டன், சம்­பள உத­வித்­தொ­கைக்கு அதி­க­மான ஊழி­யர்­கள் தகு­தி­பெறும் வகை­யில் மாத ஊதிய உச்ச வரம்­பும் 4,000 வெள்­ளி­யில் இருந்து 5,000 வெள்­ளி­யாக உயர்த்­தப்­பட்­டது.

2019ஆம் ஆண்­டில் வழங்­கப்­பட்ட சம்­பள உயர்­விற்­காக 2020ஆம் ஆண்­டில் 95,000க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்­குச் சம்­பள உத­வித்­தொ­கை­யாக $1 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை வழங்­கப்­பட்­டது.

அவ்­வாண்டு மார்ச்­சில் வழங்­கப்­பட்ட வரு­டாந்­திர வழங்­கு­தொகை­யு­டன் ஜூன் மாதத்­தில் கூடு­தல் வழங்­கு­தொ­கை­யும் தரப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மாதம் $5,000 வரை சம்­ப­ளம் பெறும் 800,000க்கும் மேற்­பட்ட உள்­ளூர் ஊழி­யர்­களுக்கு, 2017 முதல் 2020 வரை அளிக்­கப்­பட்ட ஊதிய உயர்­வில் 15 விழுக்­காட்டை அர­சாங்­கம் இணை­நி­தி­யாக வழங்­கும் என்று நிதி­ய­மைச்­சும் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் ஒரு கூட்­ட­றிக்கை வாயி­லாக நேற்று தெரி­வித்­தன.

இதன்­மூ­லம் 98,000க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் பலன்­பெ­றும் என்­றும் அந்த அறிக்கை கூறி­யது.

"கிரு­மிப் பர­வ­லால் ஏற்­பட்­டு உள்ள நெருக்­க­டி­க­ளைச் சமா­ளிக்க வேண்­டிய நிலை­யி­லும் ஊழி­யர்­க­ளைக் கைதூக்­கி­வி­டு­வதில் பல நிறு­வ­னங்­களும் தொடர்ந்து தங்­கள் பங்கை ஆற்றி வரு­வ­து நெகிழ்ச்சி அளிப்­ப­தாக உள்­ளது," என்று நிதி­ய­மைச்­ச­ரும் பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சருமான திரு ஹெங் தமது பதி­வில் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

"வேலை­களை மறு­வ­டி­வ­மைக்­க­வும் ஊழி­யர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் ஏது­வாக, சம்­பள உத­வித்­தொகை திட்­டத்­தை­யும் மற்ற திட்­டங்­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் தொடர்ந்து பயன்­ப­டுத்­திக்­கொள்ள ஊக்­கு­விக்­கி­றேன்," என்று துணைப் பிர­த­மர் கூறி­யுள்­ளார்.

சம்­பள உத­வித்­தொகை திட்­டத்­தின்­மூ­லம் வழங்­கு­தொகை பெற நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பிக்­கத் தேவை­யில்லை. தகு­தி­பெ­றும் நிறு­வ­னங்­க­ளுக்கு தங்­க­ளுக்­கான வழங்­கு­தொகை எவ்­வ­ளவு என்­பது இம்­மா­தம் 31ஆம் தேதிக்குள் கடிதம் மூலம் தெரி­விக்­கப்­படும்.

வழங்­கு­தொகை குறித்த கோரிக்­கை­கள் இவ்­வாண்டு ஜூன் 30ஆம் தேதிக்­குள் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தி­டம் தாக்­கல் செய்­யப்­பட வேண்­டும்.

கூடு­தல் விவ­ரங்­களை ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் காண­லாம். 1800-352-4727 எனும் நேரடி அழைப்பு எண் மூல­மா­க­வும் அல்­லது wcs@iras.gov.sg எனும் மின்­னஞ்­சல் முக­வரி மூல­மா­க­வும் ஆணை­யத்­தைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.