தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு அன்றாட சோதனையிலிருந்து விலக்கு

தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு அன்றாட சோதனையிலிருந்து விலக்கு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மலே­சிய சரக்கு வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு அதற்­கான சான்­றி­தழ் வழங்­கப்­படும் என்­றும் இரண்­டா­வது ஊசி போட்­டுக்­கொண்ட 14 நாள்­க­ளுக்­குப் பிறகு அவர்­கள் அன்­றா­டம் வரு­கை­ பு­ரி­யும் நேரத்­தில் செய்­யப்­படும் கொவிட்-19 பரி­சோ­த­னை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­படும் என்­றும் வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அவர்­க­ளு­டன் வரும் மற்ற ஊழி­யர்­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

தடுப்­பூசி நடை­மு­றை­யைப் பூர்த்தி செய்­த­மைக்­கான குறுஞ்­செய்தி அவர்­க­ளுக்கு அனுப்­பப்­படும்; தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழும் வழங்­கப்­படும்.

"ஆயி­னும், அவ்­வப்­போது சிங்­கப்­பூ­ரின் நில சோத­னைச்­சா­வ­டி­களில் அவர்­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­லாம்," என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

மலே­சி­யா­வில் இருந்து வாடிக்­கை­யாக சிங்­கப்­பூ­ருக்கு வரும் குறிப்­பிட்ட சில சரக்கு வாகன ஓட்டு­நர்­க­ளுக்­கும் அவர்­க­ளு­டன் வரு­வோ­ருக்­கும் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­படும் என்று சுகா­தார அமைச்சு இம்­மா­தம் 8ஆம் தேதி அறி­வித்­தி­ருந்­தது.

அதன்­மூ­லம் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளைக் கொண்டு வரும் ஊழி­யர்­கள் மூலம் கொரோனா தொற்றுவது குறை­யும் எனக் கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ருக்கு எத்­தனை முறை வந்து செல்­கின்­ற­னர் என்­ப­தன் அடிப்­ப­டை­யில் மலே­சிய சரக்கு வாகன ஓட்­டு­நர்­களும் உடன் வரு­வோ­ரும் தடுப்­பூசி போடத் தேர்வு செய்­யப்­ப­டு­வர் என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போடாத மலே­சிய சரக்கு வாகன ஓட்­டு­நர்­களும் இங்கு வர­லாம் என்­ற­போ­தும் அவர்­கள் எல்­லைச் சுகா­தார நட­வடிக்­கை­க­ளுக்கு உட்­பட வேண்­டும் என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­லும் போட்­டுக்­கொள்­ளா­வி­டி­னும், இங்கு பணி­யாற்­றும்­போது அனை­வரும் சேஃப்என்ட்ரி, உடல்­வெப்­ப­நி­லைச் சோதனை, எல்லா நேரங்­களி­லும் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்­தல் போன்ற பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களைப் பின்­பற்ற வேண்­டும்.