மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தும் தீர்வுகள்

மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தும் தீர்வுகள்

2 mins read

ஈஸ்வரன்: கொவிட்-19 நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் மீண்டெழ உதவும்

மக்­க­ளின் தேவை­களில் கவ­னம் செலுத்­தும் தீர்­வு­களை வடி­வ­மைப்­ப­தன் மூலம் கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லில் இருந்து சிங்­கப்­பூர் மீண்­டெ­ழுந்து தனக்­குச் சாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

'டிசைன் திங்­கிங்' என்று அழைக்­கப்­படும் இந்­தச் செயல்­முறை, "நிலை­யின்­மை­யைப் புதிய சாத்­தி­யக்­கூ­று­க­ளாக மாற்ற முடி­யும்" என்­றார் அவர். மக்­க­ளின் விருப்­பங்­களை இது நிறை­வேற்று­ வ­து­டன் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, முற்­போக்­கான சமு­தா­யத்தை நாம் நோக்­கிச்­செல்ல இது உத­வு­வ­தாக அவர் சொன்­னார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழுடன் பங்­கா­ளித்­துவ முயற்சி­யாக சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழ­கம் நேற்று ஏற்­பாடு செய்த மெய்­நி­கர் 'வடி­வ­மைப்பு புத்­தாக்­கக் கருத்­தரங்கு' ஒன்­றில் கலந்­து­கொண்ட பேசி­ய­போது அமைச்­சர் ஈஸ்­வ­ரன் இந்­தக் கருத்தை முன்­வைத்­தார்.

சிக்­க­லான சவால்­களை அர­சாங்­கத்­தால் மட்­டும் சமா­ளிக்க முடி­யாது என்­ப­தால் சமு­தா­யத்­தில் வெவ்­வே­றான விருப்­பங்­கள், கட்­ட­மைப்­பு­கள், ஆற்­றல்­கள் உடைய மக்­க­ளு­டன் சேர்ந்து அர­சாங்­கம் பணி­யாற்ற வேண்­டி­யி­ருப்­ப­தாக அவர் விவ­ரித்­தார்.

இதில், உயர்­கல்வி நிலை­யங்­களு­டன் பொதுத் துறை கொண்­டி­ருக்­கும் நீண்­ட­கா­லப் பங்­கா­ளித்­து­வ­ உறவுமுறையும் அடங்­கும். படைப்­பாற்­றல், விமர்­சன சிந்­தனை, துறை­களுக்கு இடையே பிரச்­சி­னை­களைத் தீர்க்­கும் ஆற்­றல் ஆகி­ய­வற்­றைப் பேணி வளர்ப்­ப­தில் உயர்­கல்வி நிலை­யங்­கள் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

மக்­க­ளு­டன் சேர்ந்து தீர்­வு­களை ஏற்­ப­டுத்த அர­சாங்­கம் விரும்­பு­கிறது. எடுத்­துக்­காட்­டாக, கடந்த மாதம் தொடங்­கப்­பட்ட 'டிஜிட்­டல் ஃபார் லைஃப்' எனும் இயக்­கம், சிங்­கப்­பூ­ரர்­கள் மின்­னி­லக்­கத் திறன்­களை வளர்க்க உத­வும் வளங்­களை வழங்­கு­கிறது.

கொவிட்-19 சூழல் மின்­னி­லக்­க­ம­யத்­தைத் துரி­தப்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­னால் புதிய வழி­முறை­கள் மூலம் வர்த்­த­கம் புரிய நிறு­வ­னங்­கள் தங்­க­ளைத் தயார்ப்­படுத்­திக்­கொள்­வ­து­டன் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் அதி­க­ரித்து வரும் எதிர்­பார்ப்­பு­களை அவை பூர்த்­தி­செய்ய வேண்­டும் என்­றார் அவர்.

தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்ப வச­தி­களை மக்­கள் பயன்­படுத்துவதை உதவ தொடர்பு, தக­வல் அமைச்­சின் பணி­கள் குறித்­தும் அமைச்­சர் தமது உரை­யில் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, மூத்­தோ­ருக்கு மின்­னி­லக்க வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்த கற்­றுக்­கொ­டுக்க மின்­னி­லக்­கத் தூதர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.