இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொவிட்-19 பரவல்

இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொவிட்-19 பரவல்

2 mins read

கிட்டத்தட்ட 40,000 பேருக்குத் தொற்று

இந்­தி­யா­வில் கடந்த 10 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு கடந்த ஐந்து நாட்­களில் கொவிட்-19 நோய்த்­தொற்று பாதிப்பு கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு கடந்த ஆண்டு நவம்­பர் 28ஆம் தேதிக்­குப் பிறகு நேற்று காலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 39,726 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னது.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் மட்­டும் இது­வரை இல்­லாத அள­வாக புதி­தாக 25,833 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இந்­தி­யா­வில் நேற்று அறி­விக்­கப்­பட்ட தொற்று எண்­ணிக்கையில் அந்த மாநி­லம் 65 விழுக்­காடு பங்­க­ளிக்­கிறது.

இந்­நி­லை­யில், மகா­ராஷ்­டி­ரா­வில் மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தா­கத் தெரி­வித்த அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் டோப், மத்­திய அர­சி­ட­மி­ருந்து வாரத்­திற்கு இரண்டு மில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­க­ளைத் தாம் கோரி­யுள்­ள­தா­கச் சொன்­னார்.

தலை­ந­கர் புது­டெல்­லி­யி­லும் கொவிட்-19 பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்­பர் 30க்கு பிறகு 607 ஆக அதி­க­ரித்­துள்­ளது. அங்கு கடந்த இரு வாரங்­க­ளாக தொற்று ஏறு­முகம் கண்டு வரு­கிறது.

கடந்த செப்­டம்­ப­ருக்­குப் பிறகு பஞ்­சாப் மாநி­லத்­தில் ஆக அதி­க­மாக 2,387 பேரும் சத்­தீஸ்­க­ரில் 211 பேரும் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தென்­னிந்­திய மாநி­லங்­க­ளைப் பார்க்­கை­யில், கர்­நா­ட­கா­வில் கடந்த நவம்­பர் 28க்கு பிறகு ஆக அதி­க­மாக 1,488 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தமி­ழ­கத்­தில் 989 பேருக்­கும் புதுச்­சே­ரி­யில் கடந்த நவம்­ப­ருக்கு பிறகு 81 பேருக்­கும் தொற்று உறு­தி­யா­னது.

நாட­ள­வில் தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் தீவி­ரப்­ப­டுத்­து­மாறு மாநில முதல்­வர்­க­ளி­டம் இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி இந்த வாரம் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

தமிழகத்தில் கிருமித்தொற்று நிலவரம் - பக்கம் 5ல்