சமயங்களின் ஒற்றுமை அச்சுறுத்தலை அகற்றும்

சமயங்களின் ஒற்றுமை அச்சுறுத்தலை அகற்றும்

2 mins read
2a10cda5-cd72-4c59-b5e0-74eecab39496
ஓனன் ரோட்டிலுள்ள காலித் பள்ளிவாசலின் அறப்பணி பிரியாணி சமைக்கும் பணியில் தொண்டூழியர்களுடன் கலாசார, சமூக, இளை யர் துறை அமைச்சர் எட்வின் டோங் இணைந்து உதவினார். படம்: திமத்தி டேவிட் -

"முஸ்லிம், கிறிஸ்­து­வர், பௌத்த சமயத்தினர் என பல்­வேறு சம­யக் குழுக்­கள் இருந்­தா­லும் சமூக நன்­மைக்­காக அனை­வ­ரும் கைகோக்­கும்­பொ­ழுது ஓர் அணுக்­க­மான பிணைப்பு உண்­டா­கிறது.

"நல்­லி­ணக்­கம், ஒத்­து­ழைப்பு, அன்பு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் எழு­வ­தால் இப்­பி­ணைப்பு பயங்­க­ர­வாத வன்­செ­யல்­க­ளுக்கு எதி­ரான தாக்­கத்தை உண்­டாக் கும்," என கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­யுள்­ளார். 'அறப்­பணி பிரி­யாணி 2021' என்­னும் நிதித் திரட்டு நிகழ்ச்­சி­யில் நேற்­று பங்­கேற்ற அவர் பின்­னர் செய்­தி­

யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

காலித் பள்ளிவாசல், கல்வி அற­நிதி, மெண்­டாக்கி, சிங்கப்பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம், பள்­ளி­வா­சல்­கள் ஆகி­யன இணைந்து இந்த நிதித் திரட்டு முயற்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

இதில் காலித் பள்ளிவாசல் தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் 'ஹார்ட் ஆஃப் காட்' தேவா­லயத் தொண்­டூ­ழி­யர்­களும் ஒன்றிணைந்து பிரி­யாணிப் பொட்­ட­லங்­களை தயார் செய்ய உதவினர். இந்நிகழ்வு சமய நல்­லி­ணக்­கத்தின் முன்னுதாரண மாகப் பார்க்கப்படுகிறது.

"இது­போன்ற நிகழ்­வு­கள் ஏற்­

ப­டுத்­தும் நன்­மை­களும் தாக்­கங்­களும் நமது பார்­வைக்கு அப்­பாற்­பட்­டவை. கல்­விக்கு உத­வும் நிதித் திரட்­டின் வழி வெவ்­வேறு சமயத்­த­வர், இனத்­த­வர்க்­கு இ­டை­யி­லான உறவு வலு­வடைகிறது. இத்தகைய நிகழ்­வு­கள் சிங்­கப்­பூ­ரில் சமயம் சார்ந்த பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்­க­ளைக் குறைப்­ப­தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்­ப­டுத்­தும்.

"இளை­ஞர்­கள் வளர வளர தங்­க­ளது அடை­யா­ளங்­க­ளைக் கண்­ட­றிய விரும்­பு­கின்­ற­னர். சமய நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தும் இது­போன்ற நிகழ்­வு­கள் அவர் களி­டத்­தில் நேர்­மறை சிந்­த­னையை வளர்க்­கும். மேலும் சம­யத் தலை­வர்­கள் இன்று நல்­லி­ணக்­கத்தை தங்­க­ளது செயல்­க­ளின் வழி வலி­யு­றுத்த இது உத­வும்." என்­றார் திரு யோங்.

இந்த நன்­கொ­டைத் திரட்­டில் பங்­கேற்று சுமார் 11,000 பிரி­யா­ணிப் பொட்­ட­லங்­களை வாங்க மக்­கள் முன்­வந்­துள்­ள­னர். இதன் மூலம் கிட்­டத் தட்ட $100,000 நிதி திரட்­டப்­பட்­டுள்­ளது.

நன்­கொடை முழு­வ­தும் கல்வி அற­நிதி உத­வித் திட்­டத்­திற்கு வழங்­கப்­படும். வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் அடிப்­ப­டைப் பள்­ளித் தேவை­களைப் பூர்த்தி செய்ய இது உத­வும்.

புத்­த­கப் பற்­று­ச்சீட்­டு­கள், பொதுப் போக்­கு­வ­ரத்­துக்­கான மானி­யங்­கள் ஆகி­யவை இதில் அடங்­கும். மெண்­டாக்­கி­யின் துணைப்­பா­டங்­

க­ளைக் கற்­கச் செல்­லும் வச­தி­

கு­றைந்த 800 மாண­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் $200 மதிப்­புள்ள பற்­று­ச்சீட்­டு­களும் மானி­யங்­களும் வழங்­கப்­படும் என கல்வி அற­நி­தி­யின் தலை­வர் திரு அப்­துல் ரசாக் மரிக்­கார் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் காலித் பள்­ளி­

வா­சல் பிரி­யாணி மிக­வும் பிர­ப­லம். காலித் பள்­ளி­வா­சல் தொண்­டூ­ழி­யர்­களும் தேவா­ல­யத் தொண்­டூ­ழி­யர்­களும் சேர்ந்து நேற்று சுமார் 6,000 பிரி­யா­ணிப் பொட்­ட­லங்­க­ளைத் தயார் செய்து விநி­யோ­கித்­த­னர்.

தொண்­டூ­ழி­யர்­களில் ஒரு­வர் 26 ஆண்­டு­க­ளாக காலித் பள்­ளி­வா­ச­லில் உறுப்­பி­ன­ரா­கப் பணி­யாற்றி­ வ­ரும் திரு நிஸ்­தார் இஸ்­மா­யில், 54. தமது இரண்டு மகன்­

க­ளு­டன் சேர்ந்து அவர் இந்­தத் தொண்­டூ­ழி­யப் பணி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

அறப்பணி நிதித் திரட்டு நிகழ்வில் அமைச்சர் எட்வின் டோங் தகவல்