மியன்மாருக்கு எதிராக வலுக்கும் அனைத்துலக நெருக்குதல்

மியன்மாருக்கு எதிராக வலுக்கும் அனைத்துலக நெருக்குதல்

2 mins read

மியன்­மா­ரில் மக்­களை நசுக்­கும் ராணுவ ஆட்­சிக்கு எதி­ராக அனைத்­து­லக நெருக்குதல் வலுத்து வரு­கிறது. மேற்­கத்­திய நாடு­க­ளு­டன் அண்­டைய ஆசிய நாடு­களும் ஒன்­று­சேர்ந்து ராணு­வத்­தின் அடக்­கு­மு­றை­யைக் கண்­டித்து வரு­கின்­றன. ஆயு­த­மின்றி போரா­டும் மக்­களை சுட்­டுப் பொசுக்க வேண்­டாம் என அவை ஒரு­மித்த குர­லில் எச்சரித்தன.

ராணு­வத்­தின் தொடர் அடக்கு­ மு­றை­யைக் கண்­டிப்­ப­தாக ஐநா தலைமைச் செய­லா­ளர் அன்­டோ­னியோ குட்­ட­ரெஸ் தெரி­வித்­தார். மியன்­மா­ருக்கு எதி­ராக உறு­தி­யான, ஒன்­றி­ணைந்த அனைத்­து­லக நட­வ­டிக்கை அவ­ச­ர­மா­கத் தேவைப்­ப­டு­வ­தாக திரு குட்­ட­ரெஸ் கூறி­ய­தாக அவ­ரது பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

ஐநா செய்­தி­யா­ளர் டாம் ஆண்­ட்ரூ­ஸும் மியன்மா­ருக்கு எதி­ராக பொரு­ளி­யல் தடை­களை உட­ன­டி­ யாக அமல்­ப­டுத்த வேண்­டும் என டுவிட்­டர் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிப்­ர­வரி 1ஆம் தேதி முதல் ராணுவ ஆட்­சிக்கு எதி­ரா­கக் கொதித்து எழுந்து போரா­டும் மக்­கள் கொல்­லப்­பட்டு வரு­கின்­ற­னர். நேற்று இரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். இது­வரை 238 பேரின் உயிரை ராணு­வம் பறித்­து­விட்­ட­தா­கக் கூறும் அர­சி­யல் கைதி­

க­ளுக்­கான உத­விச் சங்­கம், உண்­மை­யான பலி எண்­ணிக்கை இதை­விட பன்­ம­டங்கு அதி­க­மாக இருக்­கக்கூடும் என்­றது.

ரப்­பர் தோட்­டாக்­க­ளைப் பயன்­

ப­டுத்தி மக்­க­ளைப் பய­மு­றுத்­து­

வ­தற்­குப் பதில் உண்­மை­யான தோட்­டாக்­க­ளைப் பயன்­ப­டுத்தி மக்­க­ளின் உயிரை ராணு­வம் பறித்து வரு­கிறது. ஆனா­லும், ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டும் வரை போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை என ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் முழங்கி வரு­கின்­ற­னர்.

இரண்­டா­வது பெரிய நக­ரான மண்­ட­லே­யில் நேற்று ஆர்ப்­பாட்­டக் கும்­ப­லுக்­குள் வாக­னம் ஒன்று திடீ­ரென புகுந்­த­தில் பல­ரும் காய­முற்­ற­தாக உள்­ளூர் இணை­யச் செய்தி ஒன்று குறிப்­பிட்­டது. ஏன் அவ்­வாறு வாக­னம் செலுத்தி மக்­க­ளின் உயி­ரைப் பறிக்க முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது என தெளி­வா­கத் தெரி­ய­வில்லை என்­றது அச்­செய்தி. மியன்­மார் முழு­வ­தும் உள்ள சிறுநகர்­க­ளி­லும் நேற்று ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.

இதற்­கி­டையே, ஆகப்­பெ­ரிய நக­ரான யங்­கூ­னில் தற்­கா­லி­க­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட தடுப்­பு­க­ளை­அகற்­று­மாறு பொது­மக்­களை துப்­பாக்­கி­மு­னை­யில் ராணு­வம் மிரட்டி வரு­வ­தாக ஏஎ­ஃப்பி செய்தி குறிப்­பிட்­டது. ராணு­வத்­தின் தாக்­கு­

த­லி­லி­ருந்து காத்­துக்­கொள்ள ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தங்­கள் கையில் கிடைத்த பொருட்­க­ளைக் கொண்டு வீதி­களில் தடுப்­பு­களை அமைத்­துள்­ள­னர்.

ஆனால் அவற்றை எல்­லாம் ஆர்ப்­பாட்­டக்காரர்­களே அகற்ற வேண்­டும் என நேற்று யங்­கூன் முழு­வ­தும் சுற்­றுக்­கா­வல் நடத்­திய ராணு­வத்­தி­னர் மக்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் துப்­பாக்­கியை நீட்­டி­னர்.