ஆட்சேர்ப்பு: முதலாளிகளிடம் காத்திருந்து பார்க்கும் போக்கு

ஆட்சேர்ப்பு: முதலாளிகளிடம் காத்திருந்து பார்க்கும் போக்கு

3 mins read

சிங்­கப்­பூ­ரின் தொழி­லா­ளர் சந்தை மீட்சி அடை­கிறது என்­றா­லும் ஊழியர் சேர்ப்பில் முத­லா­ளி­கள் காத்­தி­ருந்து பார்ப்­போம் என்ற அணு­கு­மு­றையை இன்­ன­மும் கடைப்­பி­டிக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வ­ரு­கிறது.

மிக­வும் நிச்­ச­ய­மில்­லாத பொரு­ளி­யல் நில­வ­ரங்­களைக் கருத்­தில்­கொண்டு நிறு­வ­னங்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­கின்­றன.

கொவிட்-19 பாதிப்­பு­கள் அதிக காலத்­திற்கு அதிக பாதிப்­பு­டன் நீடித்து இருக்­கும் என்­பதே இதற்­கான கார­ணம். இதோடு சில துறை­கள் கொஞ்ச காலத்­திற்கு மீட்­சி­ய­டைய இய­லாத சூழ்­நி­லை­யும் இருக்­கின்­றன என்று கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ருக்­கான வேலை வாய்ப்­பு­கள், கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலை­யை­விட கொஞ்­சம் மேலான நிலைக்கு மீண்டு இருக்­கின்­றன என்­பது மனி­த­வள அமைச்சு சென்ற வாரம் வெளி­யிட்ட தொழி­லா­ளர் சந்தை புள்ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ந்து­உள்ளது.

வேலை பெற்ற சிங்­கப்­பூர்­வாசி­க­ளின் எண்­ணிக்கை, ஓராண்­டுக்கு முன்பு இருந்­த­தை­விட 14,900 ஆகக் கூடி­யது. இதோடு, வேலைச் சந்தை மேம்­பட்டு வரு­வ­தாக அண்­மை ஆய்வு ­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளன.

இருந்­தா­லும் ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்­கும் மனப்­போக்கு சீராக இல்லை. பல­வீ­ன­மா­கவே இன்­ன­மும் இருக்­கிறது என்று கவ­னிப்­பா­ளர்­கள் நம்­பு­கிறார்­கள். சென்ற ஆண்டு பலருக்­கும் கிடைத்த வேலை­கள் தற்­காலி­க­மா­ன­வை­தான் என்றும் வேலை ஆத­ரவுத் திட்­டம் போன்ற அர­சாங்க மானி­யங்­கள் அவற்­றுக்குக் கை கொ­டுப்­ப­தா­க­வும் அவர்­கள் நம்­பு­கி­றார்­கள்.

அத்­த­கைய தற்­கா­லிக வேலை­களை நிரந்­த­ர­மா­ன­தாக ஆக்­கு­வதே சவால் என்று 'டிபி­எஸ்' மூத்த பொரு­ளி­யல் வல்­லு­நர் இர்­வின் சியா கூறு­கி­றார்.

கொவிட்-19க்கு முன்பு இருந்த ஆட்­சேர்ப்பு நிலை படிப்­ப­டி­யா­கத்­தான் திரும்­பும் என்று 'மேன்­ப­வர் குரூப் சிங்­கப்­பூர்' என்ற நிறு­வனத்­தில் நிர்­வா­கி­யாக செய­லாற்­றும் திரு­வாட்டி லிண்டா டியோ தெரி­விக்கிறார்.

இத­னி­டையே, பல துறை­க­ளை­யும் பார்க்­கை­யில் ஆட்­சேர்ப்பு ஏற்ற இறக்­க­மாக இருக்­கிறது என்று 'பிப்­பீள் வோர்ல்­டு­வைட் கன்­சல்­டிங்' என்ற நிறு­வ­னத்­தின் நிர்வாக இயக்­கு­ந­ரான டேவிட் லியோங் கூறி­னார்.

"விமா­னப் போக்­கு­வ­ரத்து, விருந்­தோம்­பல் போன்ற துறை­கள் கொவிட்-19 பாதிப்பை இன்­ன­மும் கடு­மை­யா­கச் சந்­தித்து வரு­கின்­றன. இந்­தத் துறை­களில் இன்­னும் கொஞ்ச காலத்­திற்கு ஆட்­சேர்ப்பு நில­வ­ரம் சரி­யில்­லா­மல் இருக்­கும் என்­று­தான் தெரி­கிறது.

"அதே­வே­ளை­யில், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, தொழில்­நுட்­பம் போன்ற இதர துறை­கள் வளர்க்­கின்­றன. அவற்­றில் புதிய வேலை­கள் உரு­வா­கு­கின்­றன," என்று டாக்­டர் லியோங் கூறி­னார்.

வேலை­களை உரு­வாக்கி அவற்­றைத் தக்­க­வைத்­துக்­கொள்ள அர­சாங்­கம் அளித்து வரும் ஆத­ரவு இல்லை என்­றால் தொழி­லா­ளர் சந்தை சூழ்­நிலை சிறப்­பாக இராது என்று டாக்­டர் லியோங் தெரிவித்தார்.

"சில குறிப்­பிட்ட துறை­களில் ஆட்­சேர்ப்பு மேம்­பட்டு இருக்­கிறது. என்­றா­லும் அது இழக்­கப்­பட்ட வேலை­க­ளின் எண்­ணிக்கை அள­வுக்கு இருக்­காது. ஆகை­யால் நாம் சிர­ம­மான காலத்தில் இருந்து மீண்டு­விட்­டோம் என்ற சிந்­தனை வரு­வதற்கு இது உகந்த காலம் இல்லை," என்று டாக்­டர் லியோங் மேலும் தெரி­வித்­தார்.

இருந்தாலும் தொழி­லா­ளர் சந்தை ஊக்­க­மூட்­டும் வகை­யில் அண்­மை­யில் மீட்சி அடைந்து வரு­கிறது. தொழில்­நுட்­பம், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­கள் ஒரு­பு­றம் இருக்க, நிதிச் சேவை­கள், இணைய வர்த்­த­கம், தள­வா­டப் போக்­கு­வ­ரத்து ஆகிய துறை­களும் வளர்ந்து வரு­கின்­றன.

பல­த­ரப்­பட்ட வேலை­களில் ஊழி­யர்­க­ள் சேர்கின்­றனர்.

இந்த மீட்­சிக்கு மருத்­து­வம் மற்­றும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகிய துறை­கள் முன்­னின்று தலைமை தாங்­கு­கின்­றன.

உற்­பத்தி, கட்­டு­மா­னம், பண்­ட­க­சாலை ஆகிய துறை­களும் ஊழி­யர்­க­ளுக்கு வலு­வான தேவை இருப்­ப­தா­கத் தெரி­விக்­கின்­றன.

இருந்­தா­லும் விருந்­தோம்­பல், சுற்­றுலா போன்ற துறை­களில் வாய்ப்­பு­கள் இன்­ன­மும் குறை­வா­கவே இருக்­கின்­றன என்று 'இன்­டீட்' என்ற வேலை வாய்ப்­புத்தளம் மார்ச் 10ஆம் தேதி கூறி­யது.