இந்தியா: அதிகரிக்கும் தொற்று

இந்தியா: அதிகரிக்கும் தொற்று

1 mins read

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மிப்­பரவல் அதி­க­ரித்து வரும் நிலை­யில் நேற்று புதிய உச்­ச­மாக 46,951 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்­டில் ஒரு நாளில் பதி­வான ஆக அதி­க­மான தொற்று எண்­ணிக்கை இது. நேற்று முன்­தி­னம் இந்த எண்­ணிக்கை 43,000 ஆக இருந்­தது.

இதில் மகா­ராஷ்­டிரா, பஞ்­சாப், கா்நாட­கம், குஜ­ராத், மத்­திய பிர­தே­சம் ஆகிய ஐந்து மாநி­லங்­களில் 84.49% பாதிப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. மொத்த பாதிப்பு 11.6 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மாக உள்­ளது.

நேற்று ஒரே நாளில் 212 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதன்­மூ­லம் ஒட்­டு­மொத்த உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை 159,967 ஆகி­யுள்­ளது.

கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால் கூடு­த­லாக 120 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை இந்­திய அரசு வாங்­க­ உள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மீண்­டும் ஊர­டங்கு விதிக்­க­லாமா என சில மாநில அர­சு­கள் பரி­சீலித்து வரு­ம் வேளையில், நாடு முழு­வ­தும் மீண்­டும் ஊர­டங்கை நடை­மு­றைப்­ப­டுத்த வாய்ப்­பில்லை என்று மத்­திய அமைச்­சர் நிதின் கட்­கரி கூறி­யுள்­ளார்.