கோலாலம்பூரில் சுங்கை பெசி-உலு கிள்ளான் நெடுஞ்சாலை கட்டுமானத்தில் நேற்றுக் காலை பாரந்தூக்கி இடிந்து விழுந்ததில் சீன நாட்டவர் மூவர் மரணமுற்றனர். கனமான பாகம் விழுந்ததில் சாலையில் சென்ற கார் ஒன்றும் நசுங்கியது. அதில் சென்ற மூவர் பலத்த காயமடைந்தனர் என்று மலேசிய ஊடகச் செய்திகள் தெரிவித்தன. கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்ததாகவும் மேலும் இரு ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.
மார்ச் 3ஆம் தேதி இந்த நெடுஞ் சாலையின் ஒரு பகுதியிலிருந்த சாரக்கட்டு சரிந்ததில் வேனில் சென்ற இரு பெண்கள் உயிரிழந்தனர்.
படத்தில் நசுங்கிய காரும் உடைந்து விழுந்த பாரந்தூக்கியும். படம்: தி ஸ்டார்