பாரந்தூக்கி விழுந்து மூவர் மரணம்

1 mins read
80241889-9b1c-49e1-b4c0-eb21f4376c93
-

கோலா­லம்­பூ­ரில் சுங்கை பெசி-உலு கிள்ளான் நெடுஞ்­சாலை கட்­டு­மா­னத்­தில் நேற்­றுக் காலை பாரந்தூக்கி இடிந்து விழுந்­த­தில் சீன நாட்­ட­வர் மூவர் மர­ண­முற்­ற­னர். கனமான பாகம் விழுந்ததில் சாலையில் சென்ற கார் ஒன்றும் நசுங்கியது. அதில் சென்ற மூவர் பலத்த காய­ம­டைந்­த­னர் என்று மலே­சிய ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன. கார் ஓட்டுநர் பலத்த காய­ம­டைந்­த­தா­க­வும் மேலும் இரு ஊழியர்­கள் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் கோலா­லம்­பூர் தீய­ணைப்பு, மீட்­புத் துறை கூறியது.

மார்ச் 3ஆம் தேதி இந்த நெடுஞ் சாலையின் ஒரு பகுதியிலிருந்த சாரக்கட்டு சரிந்ததில் வேனில் சென்ற இரு பெண்கள் உயிரிழந்தனர்.

படத்தில் நசுங்கிய காரும் உடைந்து விழுந்த பாரந்தூக்கியும். படம்: தி ஸ்டார்