சிறுமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மியன்மாரில் அமைதிப் போராட்டம்

சிறுமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மியன்மாரில் அமைதிப் போராட்டம்

1 mins read
fd56d24d-ec2a-4eb0-b877-dad9c8ea64c8
-

மியன்­மா­ரில் ஆர்ப்­பாட்­டம் செய்­த­தற்­காக தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களில் 600 பேரை ராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் நேற்று விடு­தலை செய்­த­தாக மூத்த சிறைத்­துறை அதி­காரி ஒரு­வர் ஏஎஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார். "இன்­செய்ன் சிறைச்­சா­லை­யில் இருந்து இன்று (புதன்­கி­ழமை) 360 ஆண்­க­ளை­யும் 268 பெண்­க­ளை­யும் விடு­தலை செய்­து­விட்­டோம்," என்று சிறை அலு­வ­ல­கத்­தில் இருந்து அவர் கூறி­ய­தாக ஏஎ­ஃப்பி குறிப்­பிட்­டது. இருப்­பி­னும் அந்த அதி­காரி யார் என்ற விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, ராணுவ ஆட்­சிக்கு எதி­ரான போராட்­டத்­தைத் தொடர மக்­கள் முடிவு செய்­துள்­ள­னர். ஏழு வய­துப் பெண் குழந்தை துப்­பாக்­கி­யால் சுடப்­பட்டு மாண்­டது பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதன் பின்­னர் மக்­கள் வீடு­களில் இருந்­த­வா­றும் வர்த்­தக நிறு­வ­னங்­கள் கத­வு­களை மூடிய நிலை­யி­லும் அமைதி வழி போராட முடிவு செய்­தி­ருப்­ப­தா­க­வும் ஏஎ­ஃப்பி கூறி­யது.

மாண்­டலே நக­ரில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை வீடு வீடா­கத் தேடிச் சென்ற பாது­காப்­புப் படை­யி­னர் ஒரு வீட்­டின் கதவை எட்டி உதைத்து துப்­பாக்­கி­யால் கண்­மூ­டித்­த­ன­மா­கச் சுட்­ட­னர். அந்த வீட்­டுக்­குள் தமது தந்­தை­யின் மடி­யில் அமர்ந்­தி­ருந்த சிறுமி துப்­பாக்­கித் தோட்­டா­வுக்­குப் பலி­யா­னார். பின்­னர் அவ­ரது தந்தை மீதும் அவர்­கள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தாக அவ­ரது மூத்த மகள் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது.

பிப்­ர­வரி 1ஆம் தேதி ராணு­வம் ஆட்­சிக்­க­விழ்ப்பை நடத்­திய பின்­னர் அங்கு கொல்­லப்­பட்டு இருக்­கும் ஆகக் குறைந்த வய­து­டை­ய­வர் இச்­சி­று­மி­தான். இந்­தக் கொடூ­ரச் செய­லுக்கு உலக அள­வி­லான கண்­ட­னக் குரல் ஓங்கி ஒலித்து வரு­கிறது.