75% ஊழியர்கள் அலுவலகம் செல்லலாம்

75% ஊழியர்கள் அலுவலகம் செல்லலாம்

3 mins read

கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் கட்­டம் கட்­ட­மாக தளர்த்­தப்­பட்டு வரு­வ­தால் ஏப்­ரல் 5 முதல் அதி­க­மான ஊழி­யர்­கள் தங்­க­ளது வேலை­யி­டத்­திற்­குத் திரும்­பக்­கூ­டும். வீட்­டில் இருந்­தும் அலு­வ­லகத்­தில் இருந்­தும் வேலை செய்ய தனித்­த­னிக் குழுக்­கள் என்­பது இனி கட்­டா­யம் இல்­லா­மல் போகக்­கூ­டும்.

வீட்­டில் இருந்து வேலை செய்­வது என்­னும் இயல்­பு­முறை இனி 'நீக்­குப்­போக்­கான மற்­றும் கலப்பு முறை' என்ற நிலைக்கு சிங்கப்பூர் மாற இருப்­ப­தாக கொவிட்-19க்கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர் லாரன்ஸ் வோங் அறி­வித்­தார்.

அதன்­படி ஒரே நேரத்­தில் வேலை­யி­டத்­துக்­குச் செல்­லக்­கூ­டி­ய­வர்­க­ளின் தற்­போ­தைய விகி­தம் 50 விழுக்­காடு என்­பது 75 விழுக்­கா­டாக உயர்த்­தப்­ப­டு­வ­தா­க­வும் அவர் நேற்று மெய்­நி­கர் வழி­யாக நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இந்த அறி­விப்­பைத் தொடர்ந்து, ஊழி­யர்­கள் தங்­க­ளது வேலை நேரத்­தில் குறைந்­த­பட்­சம் பாதி அளவு வீட்­டில் இருந்து பணி­பு­ரிய வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் தற்­போ­தைய கட்­டுப்­பா­டு­கள் விலக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

குழுக்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்ட ஏற்­பா­டு­களும் இனி கட்­டா­ய­மல்ல என்­றா­லும் வர்த்தகம் தொய்வின்றி சீராக நடைபெற நிறு­வ­னங்­கள் அத்­த­கைய ஏற்­பா­டு­க­ளைத் தொடர்ந்து கடைப்­பி­டிக்­க­லாம் என்றும் ஊழி­யர்­களை வெவ்­வேறு வேலை­யி­டங்­களில் மாற்­று­வது இன்­னும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகவும் அமைச்சு தெரி­வித்­தது.

"வேலை தொடங்கும் நேரத்தை இரு வேறு பிரிவினருக்கு வெவ்வேறு மாதிரி மாற்றிக்கொள்ளவும் வேலை நேரத்தில் நீக்குப்போக்கு முறையைப் பின்பற்றவும் முத­லா­ளி­களை வலு­வாக ஊக்­கு­விக்­கி­றோம். எவ்வாறு இருப்பினும் நடப்பிலுள்ள அனைத்து பாது­காப்­பு நிர்­வாக நடை முறைகளையும் முத­லா­ளி­கள் தொடர்ந்து செயல்­ப­டுத்­த­வேண்­டும்," என்று திரு வோங் கூறி­னார்.

"குழு பிணைப்பு நட­வ­டிக்­கை­கள் உட்­பட வேலை­யி­டங்­களில் முத­லா­ளி­கள் ஏற்­பாடு செய்­யும் சமூக, பொழு­து­போக்கு ஒன்­று­கூ­டல்­கள் அனு­ம­திக்­கப்­படும். இருப்பினும் அதுபோன்ற நிகழ்வுகளில் எட்டுப் பேருக்­கும் கூடு­த­லா­கக் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது என்னும் கட்டுப்பாட்டை முதலாளிகள் தொடரவேண்டும்," என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

மனி­த­வள அமைச்சு, தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகிய முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள், தேவை­யான பாது­காப்­பான இடை­வெளி, கொள்­ளவு போன்­ற­வற்றை வேலை தொடர்­பான நிகழ்­ச்சி களை ஏற்­பாடு செய்­யும்­போது நிறு­வ­னங்­கள் பின்­பற்­ற­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தின.

முகக்கவ­சங்­களை அணி­யா­மல் இருக்­கும்­போது நோய் பர­வக்­கூ­டிய அபா­யம் அதி­க­மாக இருப்­ப­தால் நிகழ்ச்­சி­யில் உண­வ­ருந்­து­தல் முக்­கிய அங்­க­மாக இருக்­கக்­கூ­டாது என்­றும் உண­வ­ருந்­தும் வேளை­களில் நிகழ்ச்­சி­கள் நடத்­து­வதை நிறு­வ­னங்­கள் முடிந்­த­வரை தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

பொது­வான இடங்­களை அடிக்­கடி சுத்­தம் செய்­வது, பாது­காப்­பான இடை­வெ­ளியை உறு­தி­செய்­வது, எல்லா நேரங்­க­ளி­லும் முகக்கவ­சம் அணி­வது போன்ற பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்­பற்­று­வதை முத­லா­ளி­கள் உறு­தி­செய்­ய­வேண்­டும். இவற்றைப் பின்­பற்றத் தவ­றும் முத­லா­ளி­கள் மீது அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று தெரி­வித்த அமைச்சு, வேலை­யி­டத்தை மூடும் சாத்­தி­ய­மும் அதில் அடங்­கும் என்­றது.

எந்த நேரத்­தி­லும் மாறக்­கூ­டிய சூழல் நில­வு­கிறது என்­றும் அதற்கு முத­லா­ளி­கள் தயார்­நி­லை­யில் இருக்­க­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டது.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று மீண்­டும் பர­வக்­கூ­டிய அபா­யம் ஏற்­பட்­டால் நமது நிலைப்­பாட்டை அதற்­கேற்ப சரி­செய்து, வேலை­யி­டங்­களில் மேலும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மீண்­டும் அறி­மு­கம் செய்ய நேரி­ட­லாம்," என்று சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது.

ஏப்ரல் 5 முதல் நீக்குப்போக்கு வேலைமுறை; தனித்தனி ஊழியர் குழுக்கள் கட்டாயமல்ல