150,000 நிறுவனங்களுக்கு $3 பி. உதவி

2 mins read

மார்ச் இறுதியில் வேலை ஆதரவுத் திட்ட வழங்குதொகை

வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் கீழ் 3 பில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இம்­மா­தம் 30ஆம் தேதி முதல் 150,000 மேற்பட்ட முத­லா­ளி­க­ள் இந்த வழங்­கு­தொகைக்­குத் தகு­தி­பெ­று­வர்.

இந்த வழங்­கு­தொ­கை­யால் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் பல­ன் அடை­வர் என்று கூறப்­படுகிறது.

முத­லா­ளி­கள் தங்­க­ளின் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­காக கட்­டாய மத்­திய சேம நிதி சந்­தாக்­க­ளைச் சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் முதல் டிசம்­பர் மாதம் வரை குறிப்­பிட்ட காலக்­கெ­டுவுக்­குள் செலுத்தி வந்­தி­ருந்­தால், இந்த வழங்­கு­தொகைக்­குத் தகு­தி­பெ­று­வர்.

நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் இது குறித்து நேற்று கூட்டு அறிக்கை வெளி­யிட்­டன.

2020ஆம் ஆண்டு செப்­டம்­பர், அக்­டோ­பர், நவம்­பர், டிசம்­பர் மாதங்­களில் மொத்த மாதாந்­திர ஊதி­யத்­தின் முதல் $4,600க்கு முத­லாளி­கள் 50% வரை நிதி ஆத­ரவு பெறு­வர் என்று கூறப்­படுகிறது.

ஆகக் கடு­மை­யாக பாதிக்­கப்பட்ட விமா­னத் துறை, ஆகாயத் துறை, சுற்­றுப்­ப­ய­ணத் துறை முத­லா­ளி­க­ளுக்கு 50% நிதி ஆத­ரவு வழங்­கப்­படும்.

அதற்கு அடுத்து உண­வுச் சேவை­கள், சில்­லறை வர்த்­த­கம், கலை­கள் மற்­றும் பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­கள், நிலப் போக்­கு­வ­ரத்து, கடல் மற்­றும் கட­லோ­ரத் துறை­களுக்கு 30% நிதி ஆத­ரவு உண்டு.

சென்ற ஆண்டு செப்­டம்­பர், அக்­டோ­பர் மாதங்­களில் தரப்­பட்ட ஊதி­யங்­களில் 50% நிதி ஆத­ரவைக் கட்­ட­டச் சூழல் துறை­யின் முத­லா­ளி­கள் பெறு­வர். நவம்­பர், டிசம்­பர் மாதங்­க­ளுக்கு இவர்­களுக்கு 30% நிதி ஆத­ரவு வழங்­கப்­படும். எஞ்­சிய துறை­க­ளைச் சார்ந்த முத­லா­ளி­க­ளுக்கு 10% நிதி ஆத­ரவு கிடைக்­கும்.

"கிருமி முறி­ய­டிப்பு காலத்­திற்­குப் பின், வர்த்­த­கங்­கள் கட்­டங்­கட்­ட­மா­கத் திறக்­கத் தொடங்­கி­உள்­ளன. இந்­நி­லை­யில் வேலை­ இடங்களில் தங்­க­ளின் செயல்­பா­டு­க­ளைத் தொடங்க அனு­மதி இல்­லாத நிறு­வ­னங்­க­ளுக்­குத் தொடர்ந்து 50% நிதி ஆத­ரவு வழங்­கப்­படும். அந்த அனுமதி கிடைக்கும் வரை இந்த நிதி ஆத­ரவு நீடிக்­கும், அல்­லது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆத­ரவு இருக்­கும்," என்று கூட்­ட­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் நிறு­வ­னங்­கள் மீண்­டும் தங்­க­ளின் செயல்­பா­டு­களைத் தொடங்­கிய தேதி­யைச் சரி­பார்த்த பின்­னரே வேலை ஆத­ரவுத் திட்­ட வழங்­கு­தொகையை வர்த்­தக தொழில் அமைச்சு கணக்­கி­டும் என்­ப­தால் சுமார் 5,500 முத­லா­ளி­க­ளுக்கு மார்ச் மாதம் கிடைக்க வேண்­டிய வழங்­கு­தொகை­கள் ஏப்­ரல் இறு­திக்­குத் தள்­ளிப் போக­லாம் என்று கூட்­டறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

தங்­க­ளுக்கு வழங்­கப்­படும் தொகை குறித்து தகு­தி­பெ­றும் முத­லா­ளி­க­ளுக்கு வரும் நாட்­களில் அஞ்­சல் மூலம் தெரி­விக்­கப்­படும்.

கடி­தத்­தின் மின் வடி­வத்தை 'myTax' இணை­யத்­த­ளம் வாயி­லா­க­வும் பார்­வை­யிட முடி­யும்.

'ஒன்­றி­ணைக்­கும் வர­வு­செ­ல­வுத் திட்­டம்' கீழ் வேலை ஆத­ர­வுத் திட்­டம் சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இம்­மாத இறு­தி­யில் வழங்­கப்­ப­ட­உள்ள தொகை­யு­டன் இது­வரை திட்­டத்­தின்­கீழ் $24.5 பில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. சென்ற மாதம் அறி­விக்­கப்­பட்ட வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின்­படி, தொடர்ந்து கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள துறை­க­ளைச் சார்ந்த நிறு­வனங்­க­ளுக்கு வேலை ஆத­ரவுத் திட்­டம் மேலும் ஆறு மாதங்­கள் நீட்­டிக்­கப்­படும்.