மியன்மாரில் தொடரும் துப்பாக்கிச்சூடு

மியன்மாரில் தொடரும் துப்பாக்கிச்சூடு

2 mins read

90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

மியன்­மா­ரின் பல பகு­தி­களில் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் மீது பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் 90க்கும் மேற்பட்டோர் கொல்­லப்­பட்­ட­தாக 'மியன்­மார் நவ்' செய்தி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

அந்­நாட்­டின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான மாண்­ட­லே­யில் 13 பேரும் வணி­கத் தலை­ந­கர் யங்­கூ­னில் எழு­வ­ரும் கொல்­லப்­பட்­ட­தாக அந்­நி­று­வ­னம் கூறி­யது.

மியன்­மார் ராணு­வத் தலை­வர்­கள் நேற்று ஆயு­தப்படை தினத்­தைக் கொண்­டா­டிய வேளை­யில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் "தலை­, முதுகுப் பகுதியில்" துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. அதைப் பொருட்­ப­டுத்­தா­மல் ராணு­வத்­தின் ஆட்­சிக்­க­விழ்ப்பை எதிர்த்து யங்கூன், மாண்­டலே உள்­ளிட்ட பல்­வேறு நக­ரங்­களில் ஏரா­ள­மான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் வீதி­களில் திரண்­ட­னர்.

"இன்­றைய (நேற்­றைய) தினம் ஆயு­தப்­ப­டைக்கு அவ­மா­ன­மிக்க தினம்," என்று 'சிஆர்­பி­எச்' எனும் ராணுவ எதிர்ப்­புக் குழு­வின் பேச்­சா­ள­ரான டாக்­டர் சாசா இணை­யக் கருத்­த­ரங்கு ஒன்­றில் கூறி­னார்.

"ராணு­வத் தலை­வர்­கள் 300க்கும் மேற்­பட்ட அப்­பாவி மக்­க­ளைக் கொன்­று­விட்டு ஆயு­தப்­படை தினத்­தைக் கொண்­டா­டு­கின்­ற­னர்," என்று அவர் சொன்­னார்.

இந்­நி­லை­யில், ஆயு­தப்­படை தினத்­தைக் குறிக்­கும் வித­மாக தலை­ந­கர் நேப்­பி­டோ­வில் ராணுவ அணி­வ­குப்­பைப் பார்­வை­யிட்ட பிறகு அர­சாங்­கத் தொலைக்­காட்­சி­யில் பேசிய ராணு­வத் தலை­வர் மின் ஆங் ஹிலைங், மியன்­மா­ரில் பொதுத்தேர்­தல் நடத்­தப்­படும் என்று வாக்­கு­றுதி அளித்­தார். ஆனால் அதற்­கான கால அட்­ட­வணையை அவர் குறிப்­பி­ட­வில்லை.

"ஜன­நா­ய­கத்தை முன்­னி­றுத்த நாட்டு மக்­க­ளு­டன் சேர்ந்து கைகோக்க ராணு­வம் விரும்­பு­கிறது," என்ற அவர், கோரிக்­கை­களை முன்­வைக்க நிலைத்­தன்­மை­யை­யும் பாது­காப்­பை­யும் பாதிக்­கும் வகை­யில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் நடந்­து­கொள்­வதை ஏற்க முடி­யாது," என்று விவ­ரித்­தார்.