பெர்சத்து கூட்டணி: அம்னோ விலக முடிவு

பெர்சத்து கூட்டணி: அம்னோ விலக முடிவு

2 mins read

அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாராகுமாறு ஸாஹிட் ஹமிடி அழைப்பு

மலே­சி­யா­வின் அடுத்த பொதுத் தேர்­த­லில் பிர­த­மர் முகை­தீன் யாசி­னின் பெர்­சத்து கட்­சி­யு­ட­னான உறவை முறித்­துக்­கொள்ள அம்னோ தலை­மைத்­து­வம் முடி­வெ­டுத்­துள்­ளது.

அதற்­குக் கட்­சிக்­குள்­ளேயே எதிர்ப்பு எழுந்­துள்ள நிலை­யில், மலே­சிய அர­சி­ய­லில் அம்னோ மீண்­டும் ஆதிக்­கம் செலுத்த எடுத்து வரும் நட­வ­டிக்­கை­களை எதிர்ப்­பா­ளர்­கள் கீழ­றுக்க முயல்­வதாக அக்­கட்­சி­யின் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி சாடி­யுள்­ளார்.

அம்­னோ­வின் வரு­டாந்­திர பொதுக் கூட்­டம் நேற்று தொடங்­கி­யது. அந்த இரண்டு நாள் கூட்­டத்­தில் தொடக்க உரை­யாற்­றிய ஸாஹிட், நாட்­டின் ஆகப் பெரிய அர­சி­யல் கட்­சி­யான அம்னோ, அடுத்த தேர்­த­லில் நான்கு கட்சி கூட்­ட­ணி­யான தேசிய முன்­ன­ணி­யைத் தலை­மை­யேற்று வழி­ந­டத்த ஆயத்­த­மாக வேண்­டும் எனக் கேட்­டுக்­கொண்­டார்.

மலே­சி­யா­வில் பெரும்­பான்­மை­யாக இருக்­கும் மலாய்க்­கா­ரர்­களை பெர்­சத்து, அம்னோ, 'பாஸ்' ஆகிய கட்­சி­கள் பிர­தி­நி­திக்­கின்­றன. அம்­மூன்று கட்­சி­களும் இணைந்து 'பெரிக்­கத்­தான் நேஷ­னல்' எனும் கூட்­ட­ணியை அமைத்­தன.

இப்­போது அதி­கா­ர­பூர்­வ­மாக அக்­கூட்­ட­ணி­யில் அம்னோ இடம்­பெ­ற­வில்லை என்­றா­லும் பிர­த­மர் முகை­தீன் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு அளித்து வரு­கிறது.

இத­னி­டையே, 'பாஸ்' கட்­சி­யைத் தன்­னு­டைய உண்­மை­யான பங்­காளி எனக் குறிப்­பிட்­டுள்ள ஸாஹிட், அக்­கட்­சி­யும் பெர்­சத்து உட­னான கூட்­ட­ணி­யில் இருந்து விலக வேண்­டும் என்று வலி­யுறுத்தி­யுள்­ளார்.

'பாஸ்' கட்­சித் தலை­வர் அப்­துல் அவாங் ஹாடியை மேடை­யில் வைத்­துக்­கொண்டே அவர் இந்­தக் கோரிக்­கையை முன்­வைத்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக மலே­சி­யா­வில் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள அவ­ச­ர­நிலை ஆகஸ்ட் மாதத்­து­டன் முடி­விற்கு வந்­த­தும் அங்கு பொதுத் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிரதமர்: 222 தொகுதிகளில் அம்னோ போட்டியிட்டால் பெர்சத்துவும் போட்டியிடும்

முன்­ன­தாக, பொதுத் தேர்­த­லுக்­கான தொகுதி உடன்­பாடு தொடர்­பில் அம்னோ பேச்­சு­வார்த்­தைக்கு இட­ம­ளிக்­கா­மல் இருப்­ப­தாக பெர்­சத்து தலை­வ­ரான திரு முகை­தீன் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கூறி­ இ­ருந்­தார்.

மொத்­த­முள்ள 222 நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் அம்னோ போட்­டி­யிட முடிவு செய்­தால் பெர்­சத்­து­வும் அவ்­வாறு செய்­யும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"அம்னோ அதனை விரும்­பினால் நாங்­களும் அவ்­வாறே செய்­வோம். இத­னால் நான் ஒரு­போ­தும் பெரு­மி­தம் கொள்­ளவோ ஆண­வ­ம் கொள்ளவோ இல்லை. வரு­டாந்­திர பொதுக் கூட்­டத்­தில் அம்னோ கூறிய கருத்­து­கள் எனக்­குப் புரி­கிறது. இதற்கு முன்பு நானும் இதே நிலை­யில் (அம்னோ துணைத் தலை­வ­ராக) இருந்­தேன். மோதலை நான் எதிர்­கொள்ள விரும்­ப­வில்லை," என்று பிரதமர் முகை­தீன் யாசின் விவ­ரித்­தார்.