இந்தியாவிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் பத்தில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாடுகளுக்கு அதிகம் சென்றனர்.
2016 ஜனவரிக்கும் இந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்திலிருந்து வேலைக்காக 1.31 மில்லியன் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றதாக இந்திய வெளியுறவு துணை அமைச்சர் வீ.முரளிதரன் அண்மையில் வெளியிட்ட தகவலில் இது தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் கேரளாவிலிருந்து 1.9 மில்லியன் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

