130,000 உள்ளூர்வாசிகளுக்கு 27,000 நிறுவனங்களில் வேலை

130,000 உள்ளூர்வாசிகளுக்கு 27,000 நிறுவனங்களில் வேலை

2 mins read

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் மூலம் ஆதரவு

வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டத்­தின் ஆத­ர­வு­டன் கடந்த ஆண்­டின் செப்­டம்­பர் முதல் நவம்­பர் வரை, 27,000 நிறு­வ­னங்­கள் சரா­ச­ரி­யாக உள்­ளூர்­வா­சி­கள் இருவரை வேலை­யில் அமர்த்­தின.

2019ஆம் ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் அந்­நி­று­வ­னங்­க­ளால் வேலைக்கு எடுக்­கப்­பட்ட உள்­ளூர்­வா­சி­க­ளின் இடை­நிலை அளவு ஒன்­றாக இருந்­தது.

ஒட்­டு­மொத்­தத்­தில், வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் அறி­மு­க­மான முதல் மூன்று மாதங்­களில், அதா­வது 2020 செப்­டம்­பர்-நவம்­பர் கால­கட்­டத்­தில் ஏறக்­கு­றைய 130,000 உள்ளூர்வாசிகள் பணியமர்த்­தப்­பட்­ட­னர்.

'பசி­பிக் லாஜிஸ்­டிக்ஸ்' எனும் உள்­ளூர் நிறு­வ­னத்­திற்கு நேற்று வருகை மேற்­கொண்­ட­போது மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

அவற்­றில் 99%, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள். அவற்­றில் பத்­தில் ஆறு நிறு­வ­னங்­கள் ஒன்று முதல் இரண்டு உள்­ளூர்­வா­சி­களை­யும் எஞ்­சிய நான்கு நிறு­வனங்­கள் அதற்கு மேற்­பட்­ட­வர்­களை­யும் வேலை­யில் அமர்த்­தின.

உள்­ளூர்­வா­சி­க­ளைப் பணி­யில் அமர்த்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்­காக கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் $1 பில்­லி­யன் மதிப்­பி­லான வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்புத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தகு­தி­யுள்ள நிறு­வ­னங்­கள் வேலை­யில் அமர்த்­தும் உள்­ளூர்­வா­சி ஒவ்வொருவருக்கும் 12 மாதங்­கள் வரை, 25% ஊதிய ஆத­ர­வைப் பெறும்.

அத்­திட்­டத்தை மேலும் ஏழு மாதங்­க­ளுக்கு, அதா­வது இவ்­வாண்டு செப்­டம்­பர் வரை நீட்­டிப்­பதாக அர­சாங்­கம் கடந்த மாதம் அறி­வித்­தது. இதற்­கா­கக் கூடு­தலாக $5.2 பில்­லி­யன் ஒதுக்­கப்­பட்டுள்­ளது.

முதிர்ச்­சி­ய­டைந்த ஊழி­யர்­கள், உடற்­கு­றை­பா­டுள்­ளோர், முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் ஆகி­யோ­ருக்கு நிறு­வ­னங்­கள் வேலை­வாய்ப்பு அளிப்­பதை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் கடந்த மாதம் 1ஆம் தேதி அத்­திட்­டம் மேம்­ப­டுத்­தப்­பட்­டது. அத்­த­கை­யோரை வேலை­யில் அமர்த்­தும் நிறு­வனங்­க­ளுக்கு 18 மாதங்­கள் வரை, 50% ஊதிய ஆத­ரவு கிடைக்­கும்.

வேலைக்கு எடுக்­கப்­பட்­டோ­ரில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர், அந்நேரத்தில் வேலை­யில் இருக்­க­வில்லை. ஆறு மாதங்­க­ளுக்கு மேல் வேலை­யில்­லா­மல் இருந்­த­வர்­கள் 25 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் அதி­கம்.

அது­போல, வேலை­யில் சேர்ந்­தோ­ரில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர் 40 வய­தும் அதற்­கும் மேலா­ன­வர்­கள்; மூவ­ரில் ஒரு­வர் 50 வய­தும் அதற்­கும் மேற்­பட்­ட­வர்­கள்.

கடந்த ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் இருந்து வேலை­யின்மை விகி­தம் படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது. கடந்த அக்­டோ­ப­ரில் 4.8 விழுக்­கா­டாக இருந்த சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம், இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் 4.3 விழுக்­காட்­டிற்கு இறங்­கி­யது. அதே கால­கட்­டத்­தில் ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­த­ம் 3.6 விழுக்­காட்­டிலிருந்து 3.2 விழுக்­காட்­டிற்­குச் சரிந்­தது.

இத­னி­டையே, பல­த­ரப்­பட்ட பின்­ன­ணி­க­ளைக் கொண்ட வேலை தேடு­வோ­ரி­டத்­தில் திறந்த மனப்­பான்­மை­யு­டன் அணுக வேண்­டும் என்று நிறு­வ­னங்­களுக்கு அமைச்­சர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

இத­னி­டையே, பொரு­ளி­யல் மீண்­டு வருவதையடுத்து சில கொவிட்-19 ஆத­ரவு நட­வ­டிக்­கை­களும் திட்­டங்­களும் முடி­வடைந்து விட்டன; மற்­றவை இன்று முதல் மாற்­றம் பெறுகின்­றன. நிறு­வனங்­க­ளுக்­கும் தனி­ந­பர்­க­ளுக்­கு­மான காப்­பு­றுதி நிவா­ர­ணம் முடி­விற்கு வந்­து­விட்­டது. கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­களைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் தவிர மற்­ற­வற்­றுக்கு வேலை ஆத­ர­வுத் திட்­டம் நீடிக்­காது.