தொற்று: ஜப்பானை விஞ்சிய மும்பை

தொற்று: ஜப்பானை விஞ்சிய மும்பை

2 mins read

இந்­தி­யா­வின் வர்த்­த­கத் தலை­நகராக விளங்­கும் மும்­பை­யில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 500,000ஐத் தாண்­டி­விட்­டது. இது ஜப்­பான், ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் போன்ற நாடு­களில் பதி­வான ஒட்டு­மொத்த பாதிப்­பைக் காட்­டி­லும் அதி­கம்.

மும்­பை­யில் ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு 300,000த்தில் இருந்து 400,000த்­தைத் தொட 75 நாள்­கள் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட நிலை­யில், வெறும் 11 நாள்­களில் அந்த எண்­ணிக்கை 400,000த்­தில் இருந்து 500,000ஆக உயர்ந்­து­விட்டது.

இப்­போது அங்கு 88,053 பேர் கொரோனா தொற்­றுக்­கா­கச் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வில் புதிய உச்­ச­மாக கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 145,384 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்; 794 பேர் உயிரிழந்துவிட்­ட­னர். இதையடுத்து, ஒட்­டு­மொத்த பாதிப்பு 13,205,926ஆக­வும் மாண்­டோர் எண்­ணிக்கை 168,436 ஆக­வும் அதி­க­ரித்­தது.

புதி­தாக பாதிக்­கப்­பட்­டோ­ரில் 58,993 பேர் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள். தொடர்ந்து மூன்­றா­வது நாளாக அங்கு நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்­றால் மாண்­டு­போ­யி­னர்.

ஒட்­டு­மொத்­தத்­தில், கடந்த ஐந்து நாள்­களில் மட்­டும் புதி­தாக 616,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. இந்­தக் கால­கட்­டத்­தில் தொற்று கார­ண­மாக 3,335 பேர் இறந்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, இப்­போது கிரு­மித்­தொற்­றுக்­குச் சிகிச்சை பெற்று வரு­வோர் எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­டது. அவர்­களில் 530,000 பேர் மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்­த­வர்­கள்.

இத­னி­டையே, டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் குறைந்­தது 22 மருத்­து­வர்­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 25 விழுக்காட்டினர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள். முன்னதாக, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.