சிங்கப்பூரின் சாலைகளில் சைக்கிளோட்டுவோர் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளை நிபுணர் குழு ஒன்று மறுஆய்வு செய்ய உள்ளது.
அவர்களுக்கு உரிமம் தேவைப்படுமா என்பது பற்றியும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட வேண்டுமா என்பது பற்றியும் குழு பரிசீலிக்கும்.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் ேநற்று இதனை அறிவித்தார்.
இந்த ஆய்வை மேற்கொள்ள துடிப்புமிக்க நடமாட்டத்திற்கான ஆலோசனைக் குழு பல மாதங்களை எடுத்துக்கொள்ளும் என்றும் பொதுமக்களிடம் இருந்து அது கருத்துகளைக் கேட்டறியும் என்றும் திரு சீ கூறினார்.
சைக்கிளோட்டிகள் சாலைகளில் தவறிழைப்பது தொடர்பாக அண்மையில் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து மறுஆய்வு யோசனை பிறந்தது.
சைக்கிள் ஓட்டுவதற்கு பதிவு தேவை என்பதை புகார் தெரிவித்த சிலர் வலியுறுத்தினர்.
சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது தொடர்பில் வாகன ஓட்டுநர்களிடம் இருந்தும் சைக்கிளோட்டிகளிடம் இருந்தும் எழுந்துள்ள அக்கறைகளை அரசாங்கம் கவனித்ததைத் தொடர்ந்து மறுஆய்வு முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
சைக்கிளை ஓட்ட உரிமம் அறிமுகம் செய்வதில் உள்ள நேர்மறை, எதிர்மறை அம்சங்களைப் பரி
சீலிக்க இருக்கும் குழு அதற்காக பிற நாடுகளின் நடைமுறைகளை ஆராயும்.
அதிகமான சைக்கிளோட்டி
களைக் கொண்ட நெதர்லாந்து போன்ற நாடுகளில் சைக்கிள் ஓட்டுவதற்கு உரிமம் வழங்கவில்லை என்றும் அவற்றுக்கு அங்கு பதிவு தேவைப்படுவதில்லை என்றும் திரு சீ குறிப்பிட்டார்.
"இருப்பினும் அதை ஒரு யோசனையாக குழு கவனிக்கும். மறு ஆய்வு செய்யும்போது நியாயமான, சரிசமமான நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
"காரணம், சைக்கிளோட்டத்தை மட்டுப்படுத்தும் வகையில் கவனக்குறைவான அம்சங்கள் எதுவும் இடம்பெற்று விடக்கூடாது," என்று நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மறுஆய்வுக் குழுவில் இடம்பெற இருக்கும் சில உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் இந்த விவரங்களை அவர் வெளியிட்டார்.
சிங்கப்பூரின் போக்குவரத்துக்கான ஒட்டுமொத்த பசுமைத் திட்டத்தில் சைக்கிளோட்டம் என்பது முக்கியமான அம்சமாகத் தொடர் கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
அதே நேரம் மேலும் மேலும் பலர் சைக்கிளோட்டத்தில் ஈடு
படும்போது பாதுகாப்பாக இதனைச் செயல்படுத்துவது அவசியமாகிறது என்றும் திரு சீ கூறினார்.
சைக்கிள் தொடர்பான விபத்துகளைக் குறைக்க சைக்கிள்
களுக்கான சிறப்புப் பாதை கட்டமைப்பை விரிவுபடுத்துவது ஒரு முக்கிய நடவடிக்கை என்றார் அவர்.
மேலும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதும் சாலை ஒழுக்கத்தை மேம்படுத்துவதும் முக்கியம் என்றும் அமைச்சர் சீ குறிப்பிட்டார்.

