இன்று சித்திரைப் புத்தாண்டு. இதைக் கொண்டாடும்
அனைத்துத் தமிழர்களுக்கும் தமது வாழ்த்துகளைப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துக்கொண்டார்.
முஸ்லிம் சமூகங்களுக்கு
ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. நேற்று சீக்கியர்கள் வைசாக்கி திருநாளைக் கொண்டாடினர். இன்று மலையாளிகள் விஷுவையும் வங்காளர்கள் பொஹேலா பைஷாக்கையும் கொண்டாடுகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் லீ தமது ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டார்.
"கொவிட்-19 ஆபத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை. ஆனால் நமது வழக்கமான சடங்கு சம்பிரதாயங்களைப் பாதுகாப்பான முறையில் தொடரலாம்.
"இந்த விழாக்கள் முக்கிய
மானவை. வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களை அவை நமக்கு உணர்த்துகின்றன. சமூக அடையாளத்தையும் அவை நமக்கு ஏற்படுத்துகின்றன.
"அனைத்து சீக்கிய, இந்திய நண்பர்களுக்கு இந்த விழாக்
காலம் பாதுகாப்பானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
விழாக்களைக் கொண்டாடு
பவர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆரோக்கியமாகவும்
மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்து
கிறேன்," என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
சித்திரைப் புத்தாண்டை
முன்னிட்டு லிட்டில் இந்தியா நேற்று களைகட்டியது. பூ, பழங்கள் போன்றவற்றுக்கான வியாபாரம் அமோகமாக
நடந்தது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்