பாதிப்பு-184,372 உயிரிழப்பு-1,027

பாதிப்பு-184,372 உயிரிழப்பு-1,027

2 mins read

தொடர்ந்து 35வது நாளாக இந்தியாவில் கொவிட்-19 தொற்று சீராக அதிகரிப்பு

இந்­தி­யா­வில் புதிய உச்­ச­மாக கடந்த 24 மணி நேரத்­தில் 184,372 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அத்­து­டன், கடந்த ஆறு மாதங்­களில் இல்­லாத வகை­யில் 1,027 பேர் கிரு­மித்­தொற்­றால் இறந்­து­விட்­ட­னர். இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 13.9 மில்­லி­ய­னா­க­வும் மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 172,085 ஆக­வும் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் தொடர்ந்து 35வது நாளாக கொரோனா பாதிப்பு சீராக அதி­க­ரித்து வந்­துள்­ளது. கிருமித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 9.84 விழுக்­காட்­டினர், அதா­வது 1,365,704 பேர் இப்­போது சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இருப்­பி­னும், கும்­ப­மே­ளா­வின் மூன்­றா­வது நாளான நேற்று பல நூறா­யி­ரம் பக்­தர்­கள் கங்கை நதி­யில் புனித நீரா­டத் திரண்­ட­னர்.

பக்­தர்­கள் முகக்­க­வ­சம் அணி­வ­தும் சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­வ­தும் அரி­தா­கவே காண முடி­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது.

கும்­ப­மேளா இடம்­பெ­றும் ஹரித்­து­வார் மாவட்­டத்­தில் மட்­டும் கடந்த இரண்டு நாள்­களில் ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­டோரை கொரோனா பாதித்­து­விட்­ட­தாக அர­சுத் தர­வு­கள் கூறு­கின்­றன.

ஒரே நாளில் 102 பக்­தர்­களும் கிட்­டத்­தட்ட 20 சாதுக்­களும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­தா­கச் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னி­டையே, கொரோனா பர­வ­லின் மைய­மா­கத் திக­ழும் மகா­ராஷ்­டிர மாநிலத்­தில் நேற்­றி­ரவு 8 மணி­யில் இருந்து முதல் மே 1ஆம் தேதி வரை ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் கால­கட்­டத்­தில் உரிய கார­ண­மின்றி பய­ணம் செய்ய பொது­மக்­க­ளுக்கு அனு­மதி இல்லை. அத்­தி­யா­வ­சிய சேவை­கள் தவிர மற்ற அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­பட்­டு இருக்கிறது.

நாடு முழு­வ­தும் 'சிபி­எஸ்இ' பத்­தாம் வகுப்­புத் தேர்­வு­கள் ரத்து செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் பன்­னி­ரண்­டாம் வகுப்­புத் தேர்­வு­கள் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

கொரோனா பரவல் மிக மோசமாக இருந்து வந்தாலும் பெரிய அளவில் முடக்கநிலை அறிவிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.

உலக வங்கிக் குழுமத் தலைவர் டேவிட் மல்பாசுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு சொன்னார்.

"கொரோனா இரண்டாம் அலை இருந்தாலும் பொருளியலை முற்றிலும் முடக்கும் வகையில் முடக்கநிலையை அரசாங்கம் அறிவிக்காது. உள்ளூர் அளவில் நோயாளிகளை, அவர்களின் குடும்பத்தினரைத் தனிமைப்படுத்துதல் போன்ற வழிகளில் நிலைமை கையாளப் படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்­கி­டையே, உத்­த­ரப் பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத்­தை­யும் கொரோனா தொற்­றி­விட்­டது. அதைத் தொடர்ந்து தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ள­தாக டுவிட்­டர் வாயி­லாக அவர் தெரி­வித்­துள்­ளார்.