அமைச்சர் ஓங்: சிங்கப்பூர்-ஹாங்காங் இருதரப்பு பயண ஏற்பாடு தொடர்பில் விரைவில் அறிவிப்பு

அமைச்சர் ஓங்: சிங்கப்பூர்-ஹாங்காங் இருதரப்பு பயண ஏற்பாடு தொடர்பில் விரைவில் அறிவிப்பு

2 mins read

தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­ இன்றி சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இடையே அனைத்து வகை பய­ணங்­க­ளை­யும் மீண்­டும் தொடங்­கும் ஏற்­பாடு குறித்த விவ­ரங்­கள் இறு­தி­செய்­யப்­பட்டு வரு­வதாகப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு நவம்­ப­ரில் நடை­முறைக்கு வரவிருந்த அந்­தப் பயண ஏற்­பாடு, ஹாங்­காங்­கில் கிரு­மித்­தொற்று மீண்­டும் அதி­க­ரித்­ததை அடுத்து நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், "திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட உடன்­பாடு தொடர்­பி­லான விவ­ரங்­களை இறு­தி­செய்து வரு­கி­றோம். எங்­களது திட்­டங்­கள் குறித்து விரை­வில் அறி­விப்­போம் என நம்­பு­கி­றோம்," என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று ஓர் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்து இருக்­கிறது.

முன்­ன­தாக, இரு­த­ரப்­புப் பயண ஏற்­பாடு தொடர்­பில் இரு நக­ரங்­க­ளி­டம் இருந்­தும் தொடக்க அறி­கு­றி­களை எதிர்­பார்ப்­ப­தாக ஹாங்­காங் தலைமை நிர்­வாகி கேரி லாம் நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தார்.

சிங்­கப்­பூர் கட்­டா­ய­மாக்­க­வில்லை என்­ற­போ­தும் ஹாங்­காங்­கில் இருந்து சிங்­கப்­பூர் செல்­லும் பய­ணி­கள் அனை­வரும் கட்­டா­ய­மா­கத் தடுப்­பூசி போட்­டுக்­ கொண்­டி­ருக்க வேண்­டும் என்­றும் திரு­வாட்டி லாம் சொன்­னார்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விக்­கும் வித­மாக ஹாங்­காங் குடி­மக்­க­ளுக்­குச் சலு­கை­கள் வழங்க விரும்­பு­கி­றோம்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இடை­யி­லான மூல உடன்­பாட்­டின்­படி, நேரடி விமா­னங்­களில் ஏறு­வ­தற்­கு­முன் பய­ணி­கள் தங்­க­ளுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' எனப் பரி­சோ­த­னை­யின்­மூ­லம் உறு­திப்­ப­டுத்தி இருக்க வேண்­டும்.

முன்­னர் கொரோனா தொற்­றி­யோ­ருடன் தொடர்­பில்­லா­மல் ஏற்­படும் புதிய பாதிப்­பு­க­ளின் ஏழு­நாள் சரா­சரி ஐந்­தைத் தாண்­டி­னால் இரு­த­ரப்­புப் பயண ஏற்­பாட்­டைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­பது என இரு நக­ரங்­களும் முன்­ன­தாக ஒத்துக்­கொண்­டி­ருந்­தன.

கடந்த ஒரு வார­மாக, ஹாங்­காங்­கில் உள்­ளூர் அள­வில் அன்­றாட கொரோனா பாதிப்பு இரண்டு அல்­லது மூன்று எனப் பதி­வாகி வரு­கிறது. நேற்று முன்­தி­னம் புதி­தாக பாதிக்­கப்­பட்ட 13 பேரில் மூவர் சமூ­கத்­தில் இருப்­ப­வர்­கள்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் கடந்த இரு வாரங்­க­ளா­கச் சமூக அள­வில் வாரத்­திற்கு இரண்டு என புதிய கொரோனா பாதிப்­பு­கள் பதி­வாகி இருக்­கின்­றன.