இளையர் கையில் தமிழின் எதிர்காலம்

இளையர் கையில் தமிழின் எதிர்காலம்

3 mins read
caf046b1-4f65-4b22-8578-7d86d1b90632
தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு நினைவுமலர் வெளியீட்டு நிகழ்ச்சி யில் குழு நிர்வாகிகளுடன் அமைச்சர் எஸ் ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க ஈஸ்வரன் வலியுறுத்து

தமிழ்­மொ­ழிப் புழக்­கம் இல்­லங்

களி­லும் சமூ­கத்­தி­லும் குறைந்து வரும் பிரச்­சி­னைக்கு நல்ல தீர்வு காண உரு­வான அமைப்­பு­களில் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்சிக் குழு முக்­கி­ய­மா­னது என தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கூறி­னார். இந்­தக் குழு, பிற அமைப்­பு­க­ளு­டன் மேற்­கொண்­டுள்ள கூட்டு முயற்­சி­கள் தமிழ்­மொழி வளர்ச்­சிக்கு அடித்­த­ளம் அமைத்­த­தா­க­வும் அவர் தெரி வித்­தார்.

தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் 15 ஆண்டு பய­ணத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் நினைவு

மலரை அச்சு நூலா­க­வும் மின் நூலா­க­வும் வெளி­யி­டப்­பட்ட நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று திரு ஈஸ்­வ­ரன் பேசி­னார். இந்­நி­கழ்வு உம­றுப்­பு­ல­வர் தமிழ் மொழி நிலை­யத்­தில் நேற்று நடந்­தே­றி­யது.

தமிழ்மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு, கல்வி அமைச்­சின் நிதி­யா­த­ர­வில் 2006ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­டது. அப்­போது கல்வி அமைச்­சின் ஆராய்ச்­சி­யில் தமிழ் புழக்­கம் குறைந்­து­கொண்டு வரும் கவ­லைக்­கு­ரிய போக்கு தென்­பட்­ட­தாக திரு ஈஸ்­வ­ரன் சுட்­டி­னார்.

அன்­று­மு­தல் இன்­று­வரை மாண­வர்­க­ளி­டையே தமிழ் மொழி மீதான ஆழ­மான பற்றை உரு­வாக்­கும் பணி­யி­லும் ஆங்­கி­லத்­தின் தாக்­கம் மேலும் அதி­க­ரிக்­கும் நிலை­யில் சிங்­கப்­பூ­ரில் தமி­ழைத் தொடர்ந்து வாழும் மொழி­யாக செழிக்­கச் செய்­யும் முயற்­சி­க­ளி­லும் தமிழ் மொழி கற்­றல் குழு தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­வ­தாக அவர் கூறி­னார்.

"மன­தைக் கவ­ரும் வகை­யில் பாடங்­களை அமைத்­தால் நமது மாண­வர்­கள் உறு­தி­யாக வாழ்­நாள் முழு­வ­தும் தமிழ் மொழி மீது பற்று வைத்­தி­ருப்­பார்­கள். அதே நேரத்­தில் சமூ­கத் தலை­வர்­களும் சமூக அமைப்­பு­களும் முக்­கிய பங்­காற்றி வரு­கின்­றன. இந்­தப் பணி­கள் எல்­லாம் ஆண்­டு­தோ­றும் நடை­பெற்று வரு­கின்­றன. அதற்கு ஒரு முக்­கிய உதா­ர­ணம் தமிழ் மொழி விழா. அந்த விழாவை முன்­னின்று நடத்­தும் அமைப்­பு­க­ளுக்கு தமிழ் மொழி கற்­றல் வளர்ச்சிக் குழு உறு­ து­ணை­யாக இருக்­கிறது. அண்­மை­யில் கல்வி அமைச்சு ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டது. உயர்­த­மிழ் கற்­கும் வாய்ப்பை தொடக்க நிலை 3, 4 மாண­வர்­கள் இனி வரும் ஆண்­டு­களில் பெறு­வார்­கள் என்­பது அந்த அறி­விப்பு.

"நமது மாண­வர்­களும் நமது இளை­யர்­களும் இளம் பரு­வத்­தி­லேயே தமிழ்­மொ­ழி­யைக் கற்­ப­தற்­காக உரு­வாக்­கப்­படும் வாய்ப்­பு­

க­ளுள் ஒன்று இது. நம் தமிழ்­மொ­ழியை வளர்க்க, கலா­சா­ரத்தை கொண்­டாட பல வச­தி­கள் இங்கு உண்டு. ஆயி­னும் நமது மாண­வர்­கள் இதில் எந்த அள­வுக்கு ஆர்­வத்­து­டன் ஈடு­ப­டு­கி­றார்­கள் என்­ப­தைப் பொறுத்தே நாம் இதில் முன்­னேற்­றம் காண­மு­டி­யும். அதன் மூலம்­தான் தமிழ்­மொ­ழி­யின் எதிர்­கா­லத்­தை­யும் நமது கலா­சா­ரத்­தின் எதிர்­கா­லத்­தை­யும் நம்­மால் உறுதி செய்ய முடி­யும். அந்த வகை­யில் தமிழ்­மொழி விழா­வில் மாண­வர்­

க­ளின் ஈடு­பாடு அதி­க­மாக இருக்­கிறது. நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­ப­தோடு புத்­தாக்­க­மிக்க நிகழ்ச்­சி­க­ளைப் படைப்­ப­தி­லும் மாண­வர்­கள் ஈடு­ப­டு­கி­றார்­கள். இது­போன்ற அவர்­க­ளின் முயற்­சி­க­ளுக்கு நாம் ஊக்­க­ம­ளிக்க வேண்­டும். ஏனெ­னில் சிங்­கப்­பூ­ரில் நம் தமிழ்­

மொ­ழி­யின் எதிர்­கா­லம் மாண­வர்­க­ளின், இளை­யர்­க­ளின் கைக­ளில்­தான் இருக்­கிறது. எனவே இது ஒரு கூட்டு முயற்சி. இதில் நம் அனை­வ­ருக்­கும் முக்­கிய பங்கு இருக்­கிறது," என்று விவரித்தார் திரு ஈஸ்வரன்.

குழு கடந்­து­வந்த 15 ஆண்டு காலப் பய­ணத்தை ஆவ­ணப்­ப­டுத்­தி­ய­தில் சவால்­கள் இருந்­த­தாகக் கு­ழு­வின் ஆலோ­ச­கர் சாந்தி செல்­லப்­பன் கூறினார்.