கொவிட்-19 தடுப்பூசியை ஆரம்பக் கட்டத்தில் போட்டுக்கொண்டவர்
களுக்கு ஒன்பதாவது மாதம் முதல் 12வது மாதத்திற்குள் மேலும் ஓர் ஊசி போடுவதற்கான சாத்தியத்திற்கு அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொண்ட பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் காலம் குறித்து இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நோய் எதிர்ப்புக்கான துணை ஊசி ஒன்று தேவைப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கொவிட்-19 முறியடிப்புக் குழுவில் இடம்பெற்று உள்ள தலைமை அறிவியல் அதிகாரி டேவிட் கெஸ்லர் தெரிவித்து உள்ளார்.
இந்த கூடுதல் தடுப்பூசியை எளிதில் பாதிப்படையக் கூடிய
வர்களுக்குப் போடலாமா என்பது குறித்து ஆரம்பகட்ட ஆராய்சி அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையே, இரு தடுப்பூசி
களையும் போட்டுக்கொண்டவர்களுக்கு ஆறு மாதம் முதல் 12 மாதம் வரையிலான காலத்திற்குள் மூன்றாவது கொவிட்-19 ஊசி தேவைப் படலாம் என்று ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆல்பர்ட் பௌர்லா கூறியுள்ளார்.
இவற்றுக்குப் பிறகு ஆண்டுதோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலைமை கூட ஏற்படலாம் என்று சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார். அவர் இந்தக் கருத்தை ஏப்ரல் 1ஆம் தேதி தெரிவித்திருந்தாலும் வியாழக்
கிழமை தான் அது வெளியிடப்பட்டு உள்ளது.
ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நோய்க்கு எதிரான தடுப்பாற்றலைப் பெற்றிருக்கும் என்று ஆரம்பகட்ட தரவுகள் குறிப்பிட்டு இருந்தன. இருப்பினும் அதிகபட்சமாக அந்த ஆற்றல் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்று இன்னும் கணிக்கப்படவில்லை.
ஆறு மாதங்களைக் கடந்து பாதுகாப்பு நீடித்தாலும் விரைவாகப் பரவக்கூடிய மாற்று வகை கொரோனா கிருமிகள், இனிமேல் உருவாக்கூடிய கிருமிகள் ஆகியவற்றுக்கு எதிராக ஆண்டுதோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலைமை வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வருடாந்திர சளிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போன்றதாக இது இருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தக் கருத்துகள் நிலவி வரும் வேளையில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படும் சம்பவங்கள் மீது அமெரிக்கா கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு நிலையத்தின் இயக்குநர் ரோச்செல் வாலென்ஸ்கி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 77 மில்லியன் மக்களில் 5,800 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அவர்களில் 396 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டதாகவும் 74 பேர் மாண்டுவிட்டதாகவும் திரு வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலரிடம் வலுவான நோய் எதிர்ப்புத்திறன் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக அவர் சொன்னார்.
ஃபைசர் நிறுவனமும் அதன் பங்காளி நிறுவனமான பயோஎன்டெக்கும் தங்களது முதற்கட்ட தடுப்பூசி 91 விழுக்காடு கொவிட்-19 தடுப்பாற்றல் கொண்டது என்று இம்மாதத் தொடக்கத்தில் கூறி இருந்தன.
12,000க்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் உட்படுத்திய தரவுகளின் அடிப்படையில் அவை அதனைக் கூறி இருந்தன.
இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் ஆறு மாதங்கள் வரை 95 விழுக்காட்டுக்கு மேல் தடுப்பாற்றல் கிடைக்கக்கூடும் என்று அந்த நிறுவனங்கள் கூட் டாகத் தெரிவித்து இருந்தன.

