பிராணவாயு கசிவு; மருத்துவமனையில் 22 பேர் மரணம்

பிராணவாயு கசிவு; மருத்துவமனையில் 22 பேர் மரணம்

2 mins read
fb23d18f-a59b-48a1-9465-4dd301ade2a9
நாசிக் நகரில் உள்ள மருத்துவமனைக்கு பிராணவாயு விநியோகிக்கப்பட்டபோது கசிவு ஏற்பட்டதால் கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு பிராணவாயு விநியோகம் தடைபட்டது. இதன் காரணமாக 22 பேர் மாண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வின் மகா­ராஷ்­டிரா

மாநிலத்­தின் நாசிக் நக­ரில் பிரா­ண­வாயு விநி­யோ­கிக்­கும் லாரி­யி­

லி­ருந்து ஸாகிர் உசேன் மருத்­துவ

மனை­யின் சிலிண்­ட­ருக்கு பிரா­ண­வா­யுவை மாற்­றும் பணி நடை

பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது கசிவு ஏற்­பட்­ட­தில் 22 பேர் உயிர்­இழந்­த­னர். கசி­வின் கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற்ற நோயா­ளி­க­ளுக்­கான

பிரா­ண­வாயு விநி­யோ­கம் ஏறத்­தாழ அரை மணி நேரத்­துக்­குத் தடைபட்­ட­தாக என்­டி­டிவி செய்தி நிறுவனத்­தி­டம் மாவட்ட ஆட்­சி­யர் சூரஜ் மந்­தாரே தெரி­வித்­தார்.

மாண்ட நோயா­ளி­கள் அனை

வருக்­கும் செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஸா­கிர் உசேன் மருத்­து­வ­ம­னை­யில் கொவிட்-19 நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது கிட்­டத்­தட்ட 150 நோயா­ளி­க­ளுக்கு பிரா­ண­வாயு வழங்­கும் கருவி பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பிரா­ண­வாயு தேவைப்­படும் ஏறத்­தாழ 31 நோயா­ளி­கள் மற்ற

மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு இட­

மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பிரா­ண­வாயு கசிவு தொடர்­பாக தீவிர விசா­ரணை நடத்­தப்­படும் என்று மகா­ராஷ்­டி­ரா­வின் சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் டோப்பே உறுதி அளித்­துள்ளார்.

"எங்­க­ளுக்­குக் கிடைத்த தக­வ­லின்­படி செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்ட நோயா­ளி­கள்

மாண்­டு­விட்­ட­னர்.

"இந்த நோயா­ளி­க­ளுக்­குத் தேவை­யான பிரா­ண­வா­யுவை விநி­யோ­கம் செய்­யும் லாரி­யில் கசிவு ஏற்­பட்­டது.

"பிரா­ண­வாயு விநி­யோ­கம் தடைபட்­ட­தால் மருத்­து­வ­ம­னை­யில் இருந்த இந்த நோயா­ளி­கள்

மர­ணம் அடைந்­தி­ருக்­க­லாம்.

"விசா­ரணை முடிந்­த­தும் இது­கு­றித்து நாங்­கள் அதி­கா­ர­பூர்வ அறிக்­கையை வெளி­யி­டு­வோம்," என்று திரு டோப்பே கூறி­னார்.

மருத்­து­வ­ம­னை­யில் இருந்த நோயா­ளி­க­ளுக்­கான பிரா­ண­வாயு விநி­யோ­கம் தடைபட்­ட­தும் மருத்­து­வ­மனை ஊழி­யர்­களும் நோயா­ளி­க­ளின் குடும்­பத்­தா­ரும் பதற்­றம் அடைந்­த­தாக இந்­திய ஊட­கம் தெரி­வித்­தது.

மூச்­சுத் திண­ற­லால் சிர­மப்­பட்ட தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு உதவ பலர் படா­த­பா­டு­பட்­டதை மருத்­து­வ­ம­னை­யின் கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வான காட்­சி­கள் காட்­டின. பிரா­ண­வாயு கசிவை நிறுத்த தீய­ணைப்பு வண்­டி­கள் மருத்­துவமனைக்கு விரைந்­தன.

கசி­வைக் கட்­டுப்­ப­டுத்த தீய­ணைப்­புப் படை­யி­னர் தண்­ணீர் பீய்ச்­சி­ய­டித்­த­தாக தெரி­விக்­கப்­

பட்­டது.