இந்தியாவில் இருந்து வர தடை

இந்தியாவில் இருந்து வர தடை

3 mins read

நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள், குறுகியகால வருகை அனுமதி பெற்றவர்கள்

கடந்த 14 நாள்­களுக்குள் இந்­தியா சென்ற நீண்­ட­கால அனு­மதி அட்­டை­தா­ரர்­களும் குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­களும் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­ய­வோ அல்­லது சிங்­கப்­பூர் வழி­யா­கப் பய­ணம் செய்­யவோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். இன்­றி­ரவு 11.59 மணி­யில் இருந்து இவ்விதிமுறை நடப்புக்கு வரும்.

சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய ஏற்­கெ­னவே அனு­மதி பெற்­ற­வர்­களுக்­கும் இது பொருந்­தும் என்று கல்வி அமைச்­சரும் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்.

அத்­து­டன், அண்­மை­யில் இந்­தியா சென்று, நேற்­றி­ரவு 11.59 மணிக்­குள் 14 நாள்­கள் இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றா­த­வர்­கள், பிரத்­தி­யேக வசிப்­பிடங்­களில் மேலும் ஏழு நாள்­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டும்.

சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் இல்­லத் தனிமை உத்­த­ர­வின் 14வது நாளி­லும் இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­பும் அவர்­கள் அனை­வ­ரும் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

இந்­தி­யா­வில் கொவிட்-19 பர­வல் மோச­ம­டைந்­துள்­ள­தால் சிங்­கப்­பூர் தனது எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மையாக்கி இருப்­ப­தாக அமைச்­சர் வோங் விளக்­க­ம­ளித்­தார்.

நூறு விழுக்­காடு தவறு ஏற்­பட வாய்ப்­பில்­லா­த­தாக இல்­லத் தனிமை உத்­த­ர­வுக் காலத்­தைக் கருத முடி­யாது எனக் கூறிய திரு வோங், புதி­தாக வரும் இந்­திய ஊழி­யர்­கள் மூல­மாக தங்­கு­வி­டுதி­களில் புதிய உரு­மா­றிய கிருமி பரவி, புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கக்­கூ­டும் என்­றும் குறிப்­பிட்­டார்.

உல­கம் முழுவ­­தும் கிரு­மிப் பரவல் அதி­க­ரித்து வரு­வ­தா­லும் புதிது புதிதாக உரு­மா­றிய கிரு­மி­கள் தோன்­று­வ­தா­லும் கொரோனா தொற்­றுக்கு எதி­ரான விழிப்­பு­நிலையை சிங்­கப்­பூர் அதி­கப்­ப­டுத்தி இருப்­ப­தாக சுகா­தார அமைச்­ச­ரும் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான கான் கிம் யோங் தெரி­வித்­தார்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லும் பிரே­சி­லி­லும் முதலில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கொரோனா கிரு­மி­கள், வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­களில் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 342 பேரி­டம் கண்­டு­பி­டிக்­கப்­பட்டுள்­ளது என்று சுகா­தார அமைச்­சின் மருத்­துவ சேவை­கள் பிரிவின் இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் அவர்­கள் அனை­வ­ரும் தனி­மைப்­படுத்­தப்­பட்டுவிட்­டனர் என்றும் சமூ­கத்­தில் உரு­மா­றிய கிருமி பர­வி­ய­தா­கக் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றும் கூறப்­பட்­டது.

"கண்­ணுக்­குத் தெரி­யாத, வலிமை­மிக்க எதி­ரி­யு­டன் நாம் போராடி வரு­கி­றோம்," என்ற அமைச்­சர் வோங், மற்ற நாடு­களில் புதிய உரு­மா­றிய கிரு­மி­கள் கண்­ட­றி­யப்­பட்டு வரு­வது கவ­லை­ அ­ளிப்­ப­தாக உள்­ளது என்­றும் கூறி­னார்.

"இப்போதைய தடுப்­பூ­சிச் சுற்று முடிந்த பிற­கும், அடுத்­த­கட்ட தடுப்­பூ­சிச் சுற்­று­களை நாம் தொடர வேண்­டி­யி­ருக்­க­லாம். கொரோ­னா­விற்கு எதி­ரான போராட்­டம் இன்­னும் ஓய­வில்லை. ஆயி­னும், ஒன்­றி­ணைந்து பணி­ ஆற்­று­வ­தன் மூலம் அந்த உயிர்க்­கொல்­லியை வென்று, நாம் வலு­வா­ன­வர்­க­ளாக மீண்­டெழ முடி­யும்," என்று அவர் சொன்­னார்.

நீண்­ட­கால அனு­மதி அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் குறு­கிய கால வருகை அனு­மதி பெற்­ற­வர்­க­ளுக்­கும் விதிக்­கப்­பட்­டுள்ள தடை­யால் கட்­டு­மா­னம், கடல்­துறை, செய்­முறைத் தொழில்­துறை ஆகிய துறை­கள்­மீது கடும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

இத­னால் கட்­டுமான, வீட­மைப்­புத் திட்­டங்­கள் மேலும் தாம­த­மா­க­லாம் என்­றும் புதிய கட்­டுப்­பா­டு­களால் பாதிக்­கப்­படும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மற்­றும் ஒப்­பந்­த­தாரர்­க­ளுக்கு எவ்வகையில் கூடு­தல் ஆத­ரவு வழங்­க­லாம் என அர­சாங்­கம் ஆரா­யும் என்­றும் அவர் சொன்­னார்.