மே 26ல் சிங்கப்பூர்-ஹாங்காங் விமான பயணம்

மே 26ல் சிங்கப்பூர்-ஹாங்காங் விமான பயணம்

2 mins read

சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­குக்­கும் இடை­யில் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட இரு­த­ரப்பு விமா­னப் பய­ணம் மே 26ல் தொடங்­கும் என்று போக்கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நேற்று அறி­வித்­தார்.

அந்த ஏற்­பாட்­டின்­படி, பய­ணிகள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இல்லை. ஆறு மாதம் தாம­த­மாக சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இரு­த­ரப்பு பய­ணம் தொடங்க இருக்­கிறது.

இந்­தப் பயண ஏற்­பாடு எச்­ச­ரிக்­கை­யு­டன் தொடங்­கு­கிறது. நாள் ஒன்­றுக்கு ஒவ்­வொரு திசை­யி­லும் ஒரு விமா­னச் சேவை இடம்­பெ­றும்

முதல் இரண்டு வாரங்­களில் ஒவ்­வொரு விமா­னத்­தி­லும் 200 பய­ணி­கள்­தான் பய­ணம் செய்­ய­லாம். இந்த எண்­ணிக்கை பின்­னர் மறு­ப­ரி­சீ­ல­னை செய்­யப்­படும்.

பய­ணத்­திற்­கான விதி­மு­றை­களும் கடு­மை­யாக்­கப்­படும். புறப்­படு­வ­தற்கு முந்­தைய 14 நாட்­களில் பயணி சிங்­கப்­பூ­ரில் அல்­லது ஹாங்­காங்­கில் இருந்திருக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து ஹாங்­காங் புறப்­ப­டு­வ­தற்கு முன்­பாக பய­ணி­கள் தங்­கள் கைபே­சி­களில் ஹாங் காங்கின் 'LeaveHomeSafe' என்ற செய­லியை பதி­வி­றக்­கம் செய்து செயல்­படும் நிலை­யில் வைத்­தி­ருக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் அல்­லது ஹாங்­காங்­கில் ஒன்­று­டன் ஒன்று தொடர்­பில்­லாத சமூ­கத்­தொற்­று­கள், ஐந்து என்ற வார சரா­சரி அள­வைத் தாண்­டி­னால் இந்­தப் பயண ஏற்­பாடு நிறுத்­தப்­படும். கொவிட்-19 நில­வ­ரம் மேம்­பட்ட பிற­கு­தான் மீண்­டும் இது தொடங்­கும்.

ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­ட­தைப் போல புறப்­ப­டு­வ­தற்கு முன்பும் தரை­யி­றங்­கும் போதும் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். ஹாங்­காங்­கில் கொவிட்-19 நிலைமை கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­பது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அடுத்த ஒரு மாத காலத்­தில் சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் மிக­வும் விழிப்­பு­டன் இருந்து வர­வேண்­டும். இதில் வெற்றி பெற்­றால் முதல் விமா­னத்தை பிரச்­சினை எது­வு­மின்றி சர­ள­மா­கத் தொடங்­க­லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத­னி­டையே, இப்­போது முதல் மே 26 சேவை தொடங்கும் நாள் வரை கொவிட்-19 சூழ்­நி­லையை சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரும் என்று ஹாங்­காங்­கின் வர்த்­தக பொரு­ளி­யல் மேம்­பாட்­டுத் துறைக்கு பொறுப்பு வகிக்­கும் பிர­மு­க­ரான எட்­வர்ட் யாவ் அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

இரு தரப்­பு­க­ளி­லும் கிரு­மித்­தொற்று கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் தொடர்ந்து இருந்து வந்­தால் இந்த இரு­த­ரப்பு விமா­னச் சேவை திட்­ட­மி­டப்­பட்­ட­தைப் போல தொடங்­கும் என்று அறிக்கை கூறியது.