இந்தியாவில் கொரோனா கிருமி யால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுவரையில் உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 360,000ஐ கடந்துள்ளது.
வேகமாகப் பரவும் தொற்றைக்
கட்டுப்படுத்த முடியாமல் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 360,960 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 18 மில்லியனாகப் பதிவாகி உள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 3,293 பேர் உயிரிழந்துவிட்டனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 201,187ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பான அதிகாரபூர்வத்
தரவுகளைவிட உண்மையான நிலவரம் மோசமாக இருக்கக்கூடும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் உயிர்வாயு
தட்டுப்பாடு, படுக்கைகள்
தட்டுப்பாடு என்று மோசமாகி வரும் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறும் இந்தியாவுக்கு அனைத்துலக நாடுகள் உதவிக்கரம்
நீட்டியுள்ளன.
சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, தாய்லாந்து, சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் உயிர்வாயுக் கலன்கள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளன. தலைநகர் புதுடெல்லியில் கொரோனாவால் மரணமடைந்தோரைத் தகனம் செய்ய பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய இடங்களில் தற்காலிக தகனச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் மாண்டோரின் உடல்கள் அங்கு வரிசையாக
எரியூட்டப்படுகின்றன.
இதற்கிடைய, கொவிட்-19 கிருமித்தொற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள 150 மாவட்டங்களில் முடக்கநிலையை அமல்படுத்த நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தது. முடக்கநிலை அறிவிக்கப்பட்டால் இந்த 150 மாவட்டங்களில் அத்தியாவசிப் பொருட்கள் விற்கும், சேவைகளை வழங்கும் இடங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
சம்பந்தப்பட்ட மாநில அரசு
களுடன் மத்திய அரசாங்கம் கலந்துரையாடிய பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முடக்கநிலை தொடர்பான அம்சங்களைத் தேவைக்கு ஏற்ப பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்றும் இந்தியாவில் கொரோனா நெருக்
கடிநிலை மிகவும் மோசமாக இருப்பதால் முடக்கநிலையை முதலில் அமல்படுத்துவது முக்கியம் என்று மத்திய சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.
"மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை அவசியம் என உறுதியாக நம்புகிறோம். அதன்படி பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்," என்று மத்திய சுகாதார அமைச்சின் செய்தித்
தொடர்பாளர் கூறினார்.

