பிரதமர் லீ: சிங்கப்பூரின் நிலவரம் பிரகாசமாகி வருகிறது

பிரதமர் லீ: சிங்கப்பூரின் நிலவரம் பிரகாசமாகி வருகிறது

2 mins read

ஓராண்­டுக்கு முன்­னர் இருந்­ததோடு ஒப்பிடுகையில் சிங்­கப்­பூ­ரின் நில­வ­ரம் படிப்படியாக பிர­கா­ச­மாகி வருவதாக

பிர­த­மர் லீ சியன் லூங் கூறியுள்­ளார். உலக நெருக்­கடி, முன்­னர் அஞ்­சி­ய­தைக் காட்­டி­லும் குறை­வான காலத்­தில் முடி­வுக்கு வரும் நிலை தோன்று­வ­தா­க­வும் பிர­த­மர் தமது மே தினச் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீட்­புக்கு வெளிப்­புற நில­வ­ரங்­கள் ஆத­ரவு வழங்கி நம்­பிக்­கை­யூட்­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் புதிய அலை­களை எதிர்த்து ஐரோப்­பிய நாடு­கள் போராடி வரும் நிலை­யில், அமெ­ரிக்கா வலு­வான மீட்­சியை இவ்­வாண்டு பெற்­று­வி­டக்­கூ­டிய எதிர்­பார்ப்பை உரு­வாக்கி உள்­ளது.

"பெரிய அள­வி­லான உத­வித்­திட்­டங்­களும் அமெ­ரிக்க மக்­க­ளுக்­கான தடுப்­பூசி நட­வ­டிக்­கை­யில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தும் இதற்கு முக்­கிய கார­ணங்­கள்.

"அதே நேரம் சீனா­வும் கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்தி பொரு­ளி­யலை சிறந்த முறை­யில் சீர­மைத்து வரு­கிறது," என்று கூறிய திரு லீ, சிங்­கப்­பூர் நில­வ­ரத்­தில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றம் குறித்து விவ­ரித்­தார்.

"சிங்­கப்­பூ­ரின் வேலை­யின்மை விகி­தம் படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது. மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, உல­கப் பொரு­ளி­யல் மந்­த­நி­லைக்கு மத்­தி­யில் இவ்­வாண்டு 6 விழுக்­காட்டை தாண்­டக்­கூ­டும்," என்­றார் அவர்.

இந்த வளர்ச்சி வர்த்­தக தொழில் அமைச்சு இதற்கு முன்­னர் வெளி­யிட்ட 4 விழுக்­காடு முதல் 6 விழுக்­காடு வரை என்­னும் முன்­னு­ரைப்­புக்கு மேலா­னது.

இது­போன்ற மேம்­பட்ட நில­வ­ரத்­தால் கொவிட்-19 சிக்­க­லுக்கு முன்­னர் இருந்த நிலைமை மீண்­டும் திரும்­பும் என்­றார் பிர­த­மர்.

"மின்­னி­லக்­கம், தானி­யக்­கம், நீடித்த நிலைத்­தமை போன்­ற­வற்றை எல்­லாத் துறை­க­ளி­லும் கொள்­ளை­நோய் வேகப்

­ப­டுத்­தி­விட்­டது. அவற்­றில் புதிய வாய்ப்­பு­கள் உரு­வாகி உள்­ளன," என்று கூறிய திரு லீ, முற்­றி­லும் வேறு­பட்ட கொவிட்-19க்குப் பிந்­திய உலகை நோக்கி பொரு­ளி­யலை உரு­மாற்­றம் செய்ய வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் குறிப்­பிட்­டார்.

"கொள்­ளை­நோய் நெருக்­க­டி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யலை மீட்க ஏற்­

ப­டுத்­தப்­பட்ட, வலு­வு­டன் மீண்­டெ­ழு­வ­தற்­கான பணிக்­குழு, இந்த உரு­மாற்­றத்­திற்­கான பணி­களில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கிறது. நமது ஊழி­ய­ரணி மேலும் அதிக பன்­ம­ய­மாகி வரு­கிறது.

"தன்­னிச்­சை­யாக வேலை செய்­வோர், தொழில்­மு­னை­வோர், முதிர்ச்­சி­ய­டைந்த ஊழி­யர்­கள், புதி­தாக பட்­டக்­கல்வி முடித்­தோர் என இவர்­கள் அனை­வ­ருமே வேறு­பட்ட வேலை­வாய்ப்பு சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். ஒவ்­வொரு தரப்­பி­ன­ருக்­கும் ஏற்ற கொள்­கை­களும் தீர்­வு­களும் தேவைப்­ப­டு­கின்­றன," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார். தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் அதன் 60வது ஆண்டு நிறை­வை­யொட்டி இவ்­வாண்டு 600க்கும் மேற்­பட்ட நிறு­வ­னப் பயிற்­சிக் குழுக்­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

புதிய வேலை­களை உரு­வாக்­க­வும் திறன்­கள் தேவைப்­படும் இடங்­க­ளைக் கண்­ட­றி­ய­வும் நிறு­வ­னங்­க­ளோடு இணைந்து இக்­குழுக்கள் பணி­யாற்­றும்.

கொவிட்-19 நெருக்­கடி காலத்­தில் தொழி­லா­ளர் இயக்­கம் தனது ஒத்­து­ழைப்பை வழங்­கி­யது குறித்து பிர­த­மர் கருத்­து­ரைத்­தார். நாளைய சிறந்த எதிர்­கா­லத்­திற்­காக இன்­றைய உழி­யர்­கள் அர்ப்­

ப­ணிப்பை வழங்க அது உத­வி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.