தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செய்திப்பிரிவுகளுக்குக் கூடுதல் வளங்கள் வழங்கப்படும்

3 mins read

கோ பூன் வான்: புதிய எஸ்பிஎச் மீடியா பயிலகம் ஏற்படுத்தப்படும்

மாறி­வ­ரும் வாச­கர்­களை அர்த்­த­முள்ள வகை­யில் ஈடு­ப­டுத்­தும் திற­னைக் கொண்­டி­ருக்­கும் வித­மாக சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்­பி­எச்) மீடியா நிறு­வனத்­தின் செய்­திப்­பி­ரி­வு­க­ளுக்கு கூடு­தல் வளங்­கள் வழங்­கப்­படும் என்று முன்­னாள் அமைச்­சர் கோ பூன் வான் தெரி­வித்­துள்­ளார்.

நிறு­வ­னத்­தின் ஊட­கச் செயல்­பா­டு­கள் எஸ்­பி­எச் மீடியா நிறு­வ­னத்­திற்கு மாற்­றப்­பட்ட பிறகு, எஸ்­பி­எச் மீடியா பயி­ல­கம் உரு­வாக்­கப்­படும் என்று எஸ்­பி­எச் மீடியா அறக்­கட்­ட­ளை­யின் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­க­வுள்ள திரு கோ குறிப்­பிட்­டார்.

புதி­ய ஊழியர்களுக்கு முறை­யான பயிற்சியை அளிக்­க­வும் இப்­போ­தைய பணி­யா­ளர்­கள் புதிய தேர்ச்­சி­களைப் பெற­வும் அந்­நி­று­வ­னம் உத­வும்.

எஸ்­பி­எச் கலை­ய­ரங்­கில் இருந்த­படி அந்­நி­று­வன ஊழி­யர்­களி­டம் திரு கோ ஆற்­றிய உரை நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. அப்­போது, 2022 முதல் அதி­க­ள­வில் எஸ்­பி­எச் உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கப்­படும் என அறி­வித்த திரு கோ, அது பத்திரிகைத் துறை­யில் மட்­டு­மின்றி, மின்­னி­லக்­கத் துறை­க­ளி­லும் வழங்­கப்­படும் என்­றும் சொன்­னார்.

இப்­போ­தைய செய்­தி­யா­ளர்­கள் உல­க­ளா­விய கட்­ட­மைப்பு வாய்ப்பு­க­ளை­யும் வெளி­நாட்­டுப் பத்­தி­ரி­கை­க­ளு­டன் இணைந்து செயல்­பட வாய்ப்பு ஏற்­ப­டுத்­தித் தரும் வகை­யி­லும் உல­கத் தரம் வாய்ந்த செய்­திப்பிரி­வு­களில் ஆய்வு உத­வித் தொகை, இணைப்­புத் திட்­டங்­கள் ஏற்­ப­டுத்­தப்­படும் என்று திரு கோ தெரி­வித்­தார்.

உள்­ளூர்ப் பட்­ட­தா­ரி­கள், பத்­தி­ரிகை, மின்­னி­லக்க ஊட­கத் துறை­களில் வாழ்க்­கைத்­தொ­ழில் அனு­ப­வத்­தைப் பெறும் வகை­யில் வேலைப்­ப­யிற்­சித் திட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

"திற­மை­மிக்க, குறிக்கோள் கொண்ட இளை­யர்­க­ளுக்­குச் சிறப்­பான வாழ்க்­கைத்­தொ­ழி­லாக விளங்­கும் வகை­யில் ஈர்ப்­பு­மிக்க துறை­யாக பத்­தி­ரி­கைத் தொழிலை வைத்­தி­ருப்­ப­தில் நாங்­கள் உறு­தி­யாக இருக்­கி­றோம்," என்­றார் திரு கோ.

உரு­மாற்­றத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டிய முதல் தர­மான மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பக் குழுவை உரு­வாக்­கு­வது போன்ற வழி­களில் செய்­திப்­பி­ரி­வு­க­ளின் மின்­னி­லக்க ஊட­கச் செயல்­தி­றன் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

அன்­றாட செய்தி வாசிப்பு அனு­ப­வத்தை இன்­னும் எளி­தா­க­வும் ஆர்­வத்­தைத் தூண்­டும் வித­மா­க­வும் இருக்­கு­மாறு செய்ய, வரை­கலை, காணொளி, தொழில்­நுட்­பம், வடி­வ­மைப்பு, தரவு போன்ற பல்­வேறு தேர்ச்­சி­க­ளை­யும் கரு­வி­க­ளை­யும் அவர்­கள் கொண்­டி­ருப்­பர்.

அதற்­குச் செய்­தி­யா­ளர்­கள், தக­வல் தொழில்­நுட்­பப் பொறி­யா­ளர்­கள், இணைய ஊடக நிபு­ணர்­கள் ஆகி­யோ­ரின் கூட்­டு­மு­யற்சி தேவை என்­றும் இந்த முயற்­சிக்­குத் தேவை­யான கூடு­தல் முத­லீடு­க­ளுக்கு எஸ்­பி­எச் மீடியா திட்­ட­மிட்டு வரு­கிறது என்­றும் திரு கோ தெரி­வித்­தார்.

மின்­னி­லக்­கத் தயா­ரிப்­பு­க­ளு­டன் கூடிய அச்சு ஊடக நிறு­வனம் என்­றில்­லா­மல் அச்­சுப் பொருள்­க­ளு­டன் கூடிய மின்­னி­லக்க ஊடக நிறு­வ­னம் எனும் வகை­யில் எஸ்­பி­எச் மீடியா நிறு­வனத்தை உரு­மாற்­றும் திட்­டத்தை முடுக்­கி­விட வேண்­டும் என்­றும் அதற்கு மனப்­போக்­கில் மாற்­றம் தேவைப்­ப­டு­கிறது என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"தர­மான செய்­தி­கள் இன்­னும் முக்­கி­யம். என்­றா­லும் அது மட்­டும் போதாது," என்­றார் திரு கோ. சந்­தா­தா­ரர்­க­ளை­யும் சந்­தா­தா­ரர்கள் அல்­லா­தோ­ரை­யும் சென்­ற­டை­யும் வகை­யில் புதிய எஸ்­பி­எச் மீடியா நிறு­வ­னம் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளை­யும் தளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

அதில் வெற்­றி­பெற, சந்­தா­தாரர்­கள், சந்­தா­தா­ரர்­கள் அல்­லா­தோ­ரின் மின்­னி­லக்­கப் பழக்­க­வழக்­கங்­க­ளைக் கேட்­ட­றிந்து, புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் அவர்­க­ளின் வாழ்க்­கை­முறைக்கு ஏற்ப செய்­தி­களை வழங்கி, அவர்­களை அர்த்­த­முள்ள வகை­யில் இணைக்க வேண்­டும் என்­றும் திரு கோ சொன்னார்.

"அதற்­குச் செயல்­தி­றன்­கள், தேர்ச்­சித் தொகுப்­பு­கள், மனப்­பாங்கு ஆகி­ய­வற்­றில் ஒரு பெரும் பாய்ச்­சல் தேவை," என்­றார் அவர்.

சிறிய குழுக்­க­ளாக எஸ்­பி­எச் பணி­யா­ளர்­க­ளைச் சந்­திக்­கத் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் அவர்­களின் அக்­க­றை­க­ளை­யும் நாட்­டங்­க­ளை­யும் கேட்­ட­றிந்து வரு­வதா­க­வும் திரு கோ குறிப்­பிட்­டார்.

"செய்­திப்பிரி­வு­கள் எதிர்த்­துப் போரா­டும் ஆற்­றல் கொண்­டவை என்­ப­தும் அவை சவால்­களை எதிர்­கொள்ள ஆர்­வ­மாக உள்­ளன என்­ப­தும் இது­வ­ரை­யி­லான எனது தனிப்­பட்ட எண்­ணம். தேசிய பணி­யில் ஊட­கங்­க­ளின் பங்கு குறித்து அவை கவ­ன­மாக இருக்­கின்­றன. அதில் அவை தோற்­கக்­கூ­டாது," என்றார் திரு கோ.

இந்த உரு­மாற்­ற­ம் வெறும் ஒரு தொழில்­நுட்ப நட­வ­டிக்கை அல்ல என்­றும் கலா­சார மாற்­றத்தை உள்­ள­டக்­கி­யது என்­றும் குறிப்­பிட்ட அவர், அதற்­குக் கால அவ­கா­ச­மும் முயற்­சி­களும் தேவை என்­றும் கூறி­னார்.