24 பேருக்குப் பாதிப்பு

24 பேருக்குப் பாதிப்பு

3 mins read
9d21bbef-40c3-4761-9cc4-d36124e4405c
முழுப் பாதுகாப்பு ஆடை அணிந்து சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1க்குச் செல்லும் பயணி. நேற்று முதல் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு சாங்கி விமான நிலையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஊழியர்களுக்கும் பயணிகள் சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 24 பேருக்கு சமூக அள­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதிக்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான சமூக அள­வி­லான பாதிப்பு.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்ட 24 பேரில் 17 பேர் சாங்கி விமான நிலைய கொவிட்-19 குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. இதன்­மூ­லம் அக்­கு­ழு­மத்­தில் பாதிக்கப்பட்டோர் எண்­ணிக்கை 42ஆக அதி­க­ரித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வர் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தவர். ஏனைய ஆறு பேர் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பு­ இல்லாதவர்கள்.

இந்த 24 பேரில் 14 பேர் முன்னதாகவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள். சிங்­கப்­பூ­ரில் நேற்று மொத்­தம் 32 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்­டது. இதன்­மூ­லம் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 61,451ஆக அதி­க­ரித்­துள்­ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள 12 குழு­மங்­கள் இங்கு உள்­ளன. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த எட்டு பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­க­ளுக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்கு விடு­தி­களில் புதி­தாக யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர் என உறுதி செய்­யப்­பட்ட இங் டெங் ஃபோங் மருத்­து­வ­மனை ஊழி­ய­ரி­டம் தற்­போது தென்­படும் அறி­கு­றி­கள் மதிப்­பீடு செய்­யப்­பட்­ட­தில் அவை சளியை ஏற்­ப­டுத்­தும் 'ரைனோ­வை­ரஸ்' எனும் கிருமியால் ஏற்­பட்­டவை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யில் அறுவை சிகிச்சை அறை தொழில்­நுட்­ப­

ரா­கப் பணி­யாற்­றும் அந்த ஆட­வ­ருக்கு முன்பே கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்றும் அவ­ரி­ட­மி­ருந்து கிருமி பர­வும் அபா­யம் இல்லை என்று நம்­பப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது.

"எங்­கள் ஊழி­யர் குண­ம­டைந்து வரு­வது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது. அவ­ருக்­கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் நாங்­கள் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கு­வோம்," என்று இங் டெங் ஃபோங்

மருத்­து­வ­மனை அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. நேற்று முன்­

தி­னம் 16 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் 10 பேருக்கு சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது. ஏனைய ஆறு பேர் வெளி­நா­டு­

க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள்.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்ட 10 பேரில் ஏழு பேர் சாங்கி விமான நிலைய கொவிட்-19 குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­களில் மூவ­ருக்கு பி1617 வகை கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. முனை­யம் 3ல் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணைய அதி­கா­ரி­க­ளா­கப் பணி­யாற்­றும் 39 வயது ஆட­வர், 38 வயது பெண் ஆகி­யோ­ரு­டன் முனை­யம் 3ல் பணி­யாற்­றும் 65 வயது துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரும் அவர்­களில் அடங்­கு­வர். பாதிக்­கப்­பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் இரு­முறை கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இம்­மா­தம் 3ஆம் தேதி­யி­லி­ருந்து சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 3க்குச் சென்­ற­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

"கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள எவ்­வாறு முன்­ப­திவு செய்­வது என்­பது குறித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்

களுக்குப் படிப்­ப­டி­யாக குறுந்

தக­வல் மூலம் தக­வல் அனுப்­பப்­படும்," என்று சுகா­தார அமைச்சு கூறி­யது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தாக நேற்று முன்­தி­னம் உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒரு­வருக்கு கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பு­ இல்லை.

அவர் செங்­காங் பொது மருத்­து­வ­ம­னை­யில் அறுவை சிகிச்சை அறை தாதி­யா­கப் பணி­பு­ரி­யும் 33 வயது ஆட­வர்.

அவ­ருக்கு பி1617 வகை கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு இருந்த நிலை­யு­டன் ஒப்­பி­டும்­போது கடந்த வாரத்­தில் சமூக அள­வி­லான பாதிப்பு 62லிருந்து 49ஆக குறைந்­துள்­ளது. இருப்­பி­னும், கடந்த ஒரு வாரத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்பு­இல்­லா­த­வர்­கள் பாதிப்­ப­டைந்­தி­ருப்­பது அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.