கோவா கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நான்கு நாள்களில் 75 பேர் உயிரிழப்பு

கோவா கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நான்கு நாள்களில் 75 பேர் உயிரிழப்பு

2 mins read
a8ba28f4-9773-4694-9a0b-c90bc72be4f6
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கொரோனா தொற்றுக்குக் குழந்தையைப் பறிகொடுத்த துக்கம் தாளாது, கண்ணீர்விட்டுக் கதறியழும் தந்தையை (நடுவில்) தேற்றும் தொண்டூழியர்கள். படம்: ஏஎஃப்பி -

இந்­தி­யா­வின் கோவா மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை கார­ண­மாக கடந்த நான்கு நாள்­களில் 75 பேர் மர­ண­ம­டைந்தனர்.

அம்­மா­நி­லத்­தின் ஆகப் பெரிய கொரோனா மருத்­து­வ­மனை இது­தான். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை கார­ண­மாக அங்கு 26 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அதைத் தொடர்ந்து, அம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் ஆக்­சி­ஜன் பற்­றாக்­கு­றை­யால் மேலும் மர­ணம் ஏற்­ப­டா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று மும்பை உயர் நீதி­மன்­றத்­தின் கோவா அமர்வு வலி­யு­றுத்தி இருந்­தது.

ஆயி­னும், அந்த மருத்­து­வ­ம­னை­யில் ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை நீடிப்­பது தொடர்­கிறது. இதன் கார­ண­மாக, கடந்த புதன்­கி­ழமை 21 பேரும் வியா­ழ­னன்று 15 பேரும் நேற்­றுக் காலை 13 பேரும் இறந்­து­விட்­ட­தாகக் கூறப்படுகிறது.

ஆக்­சி­ஜனை எடுத்­துச் செல்­வ­தில் காணப்­படும் தள­வா­டப் பிரச்­சி­னை­களே இதற்­குக் கார­ணம் என்று நீதி­மன்­றத்­தில் கோவா அரசு தெரி­வித்­தது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதி­மன்­றம், தள­வா­டப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக கொரோனா நோயா­ளி­கள் இறப்­பதை அனு­மதிக்க முடி­யாது என்­றும் அதன் தொடர்­பில் நேற்­றி­ரவு 7 மணிக்­குள் அறிக்கை தாக்­கல் செய்ய வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்­டது.

3வது நாளாக 4,000 மர­ணங்கள்

இத­னி­டையே, தொடர்ந்து மூன்­றா­வது நாளாக இந்­தி­யா­வில் 4,000 அல்­லது அதற்கு மேற்­பட்ட கொரோனா மர­ணங்­கள் பதி­வா­கி­ உள்­ளன. அதே வேளை­யில், முந்­திய நாளைக் காட்­டி­லும் கடந்த 24 மணி நேரத்­தில் புதிய பாதிப்­பு­களின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 19,000 குறைந்­தது. கடந்த 24 மணி நேரத்­தில் அங்கு புதி­தாக 343,144 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்; 4,000 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இந்தியாவில் ரஷ்யத் தடுப்­பூசி

கொவி­ஷீல்டு, கொவேக்­சின் என இரு தடுப்­பூ­சி­கள் மட்­டுமே இந்­தி­யா­வில் போடப்­பட்டு வரும் நிலை­யில், ரஷ்­யா­வின் 'ஸ்புட்­னிக் V' தடுப்­பூசி அடுத்த வாரத்­திலிருந்து இந்­தி­யா­வில் அறி­மு­கப்படுத்­தப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அதற்கு முன்­னோ­ட்டமாக, முத­லா­வது ஸ்புட்­னிக் தடுப்­பூசி ஹைத­ரா­பாத்­தில் நேற்று போடப்­பட்­டது. இருமுறை அத்தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நிலையில், ஒருமுறை தடுப்பூசிக்கான விலை ரூ.995 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.