சாங்கி விமான நிலையத்தில் பிரித்து வைக்கப்படுவர்

சாங்கி விமான நிலையத்தில் பிரித்து வைக்கப்படுவர்

3 mins read

தொற்று அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகள்

கொவிட்-19 தொற்று அபா­யம் அதி­க­முள்ள பகு­தி­களில் இருந்து சாங்கி விமான நிலை­யத்­திற்கு வரும் பய­ணி­கள், குறைந்த அபா­ய­முள்ள பகு­தி­களில் இருந்து வரும் பய­ணி­க­ளி­டம் இருந்து பிரித்து வைக்­கப்­ப­டு­வர்.

குறைந்த அபா­ய­முள்ள பகு­தி­களில் இருந்து வரும் பய­ணி­கள் பயன்­ப­டுத்­தும் வழி­க­ளின்றி, அதிக அபா­ய­முள்ள பகுதி­களில் இருந்து வரு­வோர்க்­கென வேறு வழி­கள் ஒதுக்­கப்­படும்.

அதே­போல, வருகை குடி­நு­ழை­வுக் கூடங்­கள், பய­ணப்பை சுழல்­பட்­டை­கள், கழி­வ­றை­கள் ஆகி­ய­ன­வும் அவர்­க­ளுக்­கென பிரத்­தி­யே­க­மாக ஒதுக்­கப்­படும்.

கொரோனா தொற்று அபா­யம் அதி­க­முள்ள பகு­தி­களில் இருந்து வரு­வோர், விமான நிலை­யத்­தில் இருக்­கும் எல்லா நேரங்­க­ளி­லும் பாது­காப்­பு­டன் வழிநடத்திச் செல்லப்படுவர்.

அத்­து­டன், விமான நிலை­யத்­தில் வந்­தி­றங்­கி­ய­தும் செய்­து­கொள்ள வேண்­டிய கொரோனா பரி­சோ­த­னையை அவர்­கள் பிரத்­தி­யேக உடல்­ந­லப் பரி­சோதனை மையங்­களில் செய்­து­கொள்ள வேண்­டும்.

சாங்கி விமான நிலை­யத்­தில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­கள் பெரும்­பா­லும், தெற்­கா­சியா உட்­பட தொற்று அபா­யம் அதி­க­முள்ள பகு­தி­களில் இருந்து வரும் பய­ணி­களை வர­வேற்­கும் ஒரு பகுதி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று முன்­தினம் தெரி­வித்­தி­ருந்­தார்.

8,000 ஊழியர்களுக்குப் பரிசோதனை

கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் சிறப்­புப் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக, சாங்கி விமான நிலைய பய­ணி­கள் முனை­யக் கட்­ட­டங்­களில் பணி­பு­ரி­யும் கிட்­டத்­தட்ட 8,000 ஊழி­யர்­கள் அடுத்த சில நாள்­க­ளுக்­குள் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, 59 பேரு­டன் இப்­போது சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய கிரு­மித்­தொற்­றுக் குழு­ம­மாக சாங்கி விமான நிலை­யம் விளங்­கு­கிறது.

இம்­மா­தம் 9ஆம் தேதி­யில் இருந்து விமான நிலைய ஊழி­யர்­கள் கிட்­டத்­தட்ட 10,000 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர்­களில் 35 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­ன­தா­க­வும் சிங்­கப்­பூர் பொது விமா­னப் போக்கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று ஓர் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­தது.

ஆயி­னும், அவர்­களில் எவ­ருக்­கும் உடல்­நிலை மோச­மான நிலை­யில் இல்லை.

இதை­ய­டுத்து, தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் போட்­டி­ருக்­கா­வி­டி­னும் தொற்று பாதிப்­புக்கு அதிக வாய்ப்­புள்ள பொறுப்­பு­களை ஏற்­றுள்ள விமான நிலைய ஊழி­யர்­கள் அனை­வ­ரும் ஏழு நாள்­க­ளுக்கு ஒரு­முறை கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும்­ வகையில் அட்­ட­வணை போடப்­பட இருக்­கிறது.

இப்­போது, அந்­தக் கால­முறை பரி­சோதனை 14 நாள்­க­ளுக்கு ஒரு­முறை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

மேலும், தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டோ­ரில் பல­ரும் மூன்­றாம் முனை­யத்­தின் கீழ்த்­த­ளம் 2ல் உள்ள ஓர் உண­வ­கத்­தில் உண்­ட­தா­க­வும் தூய்மை, கிரு­மி­நா­சினி தெளிப்பு பணி­க­ளுக்­காக அந்த உண­வகம் இம்­மா­தம் 10ஆம் தேதி­யில் இருந்து மூடப்­பட்டு இருப்­ப­தா­க­வும் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஜுவல் சாங்­கி­யில் இப்­போது தூய்மை, கிரு­மி­நா­சினி தெளிப்­புப் பணி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன என்­றும் விமான நிலைய ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்ட இடங்­களா­கச் சந்­தே­கிக்­கப்­படும் இடங்­க­ளுக்­கும் அந்­ந­ட­வ­டிக்­கை­கள் நீட்­டிக்­கப்­படும் என்­றும் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

அங்­குள்ள கோப்­பித்­தி­யாம் நிலை­யத்­தி­லும் ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­யி­லும் தூய்மை, கிரு­மி­நா­சினி தெளிப்­புப் பணி­கள் நிறை­வ­டைந்­து­விட்­டன.

பரிசோதனை குறித்து குறுஞ்செய்தி

இம்­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து சாங்கி விமான நிலை­யம் மூன்­றாம் முனை­யத்­திற்­குச் சென்று வந்த பொது­மக்­கள் இல­வ­ச­மாக கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம். அவர்­கள் அனை­வ­ரும் அப்­ப­ரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

பரி­சோ­த­னைக்கு முன்­ப­திவு செய்­து­கொள்­வது எப்­படி என்­பது குறித்துப் படிப்­படி­யாக ஆணை­யம் அவர்­க­ளுக்­குக் குறுஞ்­செய்தி அனுப்­பும்.

"கிருமித்தொற்­றுக்­கெ­தி­ரா­கத் தொட­ரும் போரில், அக்­கி­ரு­மி­யைப் பர­வ­வி­டா­மல் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உதவ தங்­க­ளது பங்கை ஆற்­று­மாறு விமான நிலை­யச் சமூ­கத்­திற்கு அழைப்பு விடுத்­து இருக்கிறோம். சமூ­கப் பொறுப்­பைக் கடைப்­பி­டிக்­கு­மா­றும் சமூ­கக் கலந்­து­ற­வா­டல்­க­ளைக் குறைத்­துக்­கொள்­ளு­மா­றும் விமான நிலைய ஊழி­யர்­கள் நினை­வூட்­டப்­பட்டு வரு­கின்­ற­னர்.

"தங்­க­ளை­யும் தங்­க­ளின் அன்­புக்­குரி­ய­வர்­க­ளை­யும் பாது­காத்­துக்­கொள்ள தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வும் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­வும் அவர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்," என்று பொது விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­து உள்­ளது.

உல­கத்­து­டன் சிங்­கப்­பூர் தொடர்ந்து இணைந்­தி­ருப்­பதை உறு­தி­செய்­யும் அதே வேளை­யில், விமான நிலை­யத்­தை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தில் விமான நிலை­யச் சமூ­கத்­தி­னர் அளித்து வரும் பங்­க­ளிப்­பை­யும் அவர்­க­ளின் அர்ப்­ப­ணிப்­பை­யும் தியா­கங்­க­ளை­யும் அங்­கீ­க­ரிப்பதாக ஆணை­யம் கூறியிருக்கிறது.