டெல்லி முதல்வரின் கருத்தில் உண்மை இல்லை: சிங்கப்பூர்

டெல்லி முதல்வரின் கருத்தில் உண்மை இல்லை: சிங்கப்பூர்

3 mins read

இந்தியத் தூதரிடம் அக்கறையை வெளிப்படுத்திய அமைச்சு

'புதி­தாக உரு­மா­றிய' கொவிட்-19 கிருமி சிங்­கப்­பூ­ரில் காணப்­பட்­ட­தாக டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்த கருத்­தில் உண்மை இல்லை என சிங்­கப்­பூர் பதி­ல­ளித்துள்­ளது. முத­ல­மைச்­சர் போன்ற பத­வி­யில் இருப்­ப­வர் இத்தகைய கருத்­தை வெளியிடும் முன்­னர் உண்மைநிலையை அறி­யத் தவ­றி­விட்­ட­தா­க­வும் இது தனக்கு ஏமாற்­றம் அளிப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

கெஜ்­ரி­வால் நேற்று முன்­தி­னம் ஃபேஸ்புக், டுவிட்­டர் போன்ற சமூக ஊடகங்­களில் ஆதா­ர­மற்ற கூற்­று­களை வெளி­யிட்­டது வருத்­த­ம­ளிப்­

ப­தா­க­வும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

'சிங்­கப்­பூ­ரில் உரு­மா­றிய கிருமி' குழந்­தை­

க­ளுக்கு தீங்கு விளை­விக்­கக்­கூ­டி­யது என­வும் இந்­தி­யா­வில் மூன்­றா­வது கிரு­மித்­தொற்று அலையை இது உரு­வாக்­கக்­கூ­டும் என­வும் கெஜ்­ரி­வால் தமது பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்தி மொழி­யில் டுவிட்­டர் வாயி­லாக பதி­விட்ட தக­வ­லில் சிங்­கப்­பூ­ருக்­கும் டெல்­லிக்­கும் இடை­யி­லான விமா­னப் போக்­கு­வ­ரத்தை ரத்து செய்­ய­வேண்­டும் என இந்­திய அர­சாங்­கத்­தை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இது தொடர்­பாக நேற்­றுக் காலை சிங்­கப்­பூ­ரில் உள்ள இந்­திய தூதர் திரு பி. கும­ர­னைச் சந்­தித்து வெளி­யு­றவு அமைச்சு தனது அக்­க­றை­க­ளைத் தெரி­வித்­த­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் கூறினார்.

இந்­நி­லை­யில், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், "'சிங்­கப்­பூ­ரில் உரு­மா­றிய கிருமி' என்று எது­வும் இல்லை. அர­சி­யல்­வா­தி­கள் உண்மை நிலை­யைத் தெரிந்து பேச­வேண்­டும்," என்று கூறி­யுள்­ளார்.

பிர­சித்தி பெற்ற 'நேச்­சர்' (Nature) அறி­வி­யல் சஞ்­சி­கை­யில் மே 11ஆம் தேதி வெளி­யான கட்­டுரை ஒன்றை டாக்­டர் விவி­யன் தமது பதி­வு­டன் இணைத்­துள்­ளார்.

பி1617 போன்ற உரு­மாற்­றம் கண்ட கிருமி உல­கின் 40 நாடு­க­ளுக்­குப் பர­வும் முன்­னர் எவ்­வாறு இந்­தி­யா­வில் ஆதிக்­கம் செலுத்­தி­யது என்­பதை அக்­கட்­டுரை விவ­ரிக்­கிறது.

டாக்­டர் விவி­ய­னுக்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ் ஜெய்­சங்­கர் ஒரு டுவிட்­டர் தக­வ­லைப் பதி­விட்­டுள்­ளார்.

அதில், "கெஜ்­ரி­வால் இந்­தி­யா­வைப் பிர­தி­நி­தித்­துப் பேச­வில்லை. கொவிட்-19க்கு எதி­ரான போரில் சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் உறுதி மிக்க பங்­கா­ளி­க­ளா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன.

"தள­வாட மைய­மா­க­வும் ஆக்­சி­ஜன் விநி­யோ­கிப்­பா­ள­ரா­க­வும் சிங்­கப்­பூர் ஆற்­றி­வ­ரும் பங்கு போற்­று­த­லுக்கு உரி­யது," என்று திரு ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், "பொறுப்­பற்ற கருத்­து­களை வெளி­யி­டு­வோர் நீண்­ட­கால பங்­கா­ளித்­து­வத்­துக்கு அக்­க­ருத்­து­கள் பங்­கம் ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும்," என கெஜ்­ரி­வா­லின் பெய­ரைக் குறிப்­பி­டா­மல் திரு ஜெய் சங்­கர் கூறி­னார்.

அத­னைத் தொடர்ந்து டாக்­டர் விவி­யன் வெளி­யிட்ட மற்­றொரு டுவிட்­ட­ரில் திரு ஜெய்­சங்­க­ருக்கு நன்றி தெரி­வித்­த­தோடு, "இரு நாடு­க­ளின் நிலை­மைக்­குத் தீர்­வு­காண்­ப­தில் கவ­னம் செலுத்தி ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உத­வு­வோம்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் அரிந்­தம் பக்சி வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், "கொவிட்-19 உரு­மாற்­றக் கிரு­மி­கள் தொடர்­பிலோ விமா­னப் போக்கு

வரத்­துக் கொள்கை தொடர்­பிலோ கருத்­து­களை வெளி­யிட கெஜ்­ரி­வா­லுக்கு எவ்­வித அதி­கா­ர­மு­மில்லை," என்று கூறி­யுள்­ளார்.

டெல்லி முதல்­வ­ரின் கருத்து செய்­தித்­

த­ளங்­களில் வெளி­யான ெசவ்­வாய்க்­கி­ழமை இரவே சிங்­கப்­பூ­ரின் சுகா­தார அமைச்சு இந்­தக் கருத்­தில் உண்மை இல்லை என மறுத்­தது.

மேலும், "அண்­மைய வாரங்­க­ளா­கப் பரவி வரும் கொவிட்-19 சம்­ப­வங்­களில் காணப்­பட்ட B.1.617.2 என்­னும் உரு­மாற்­றக் கிருமி முதன்­மு­த­லில் இந்­தி­யா­வில் கண்­ட­றி­யப்­பட்­டது," என்­றும் அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யது.

டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வா­லின் சமூக ஊட­கக் கருத்து வெளி­யான செவ்­வாய்க்­கி­ழமை பின்­னே­ரத்­தில் சிங்­கப்­பூ­ரின் போக்­கு­

வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் ஃபேஸ்புக் வாயி­லாக தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­னார். "முதல்­வர் கெஜ்­ரி­வா­லின் இது­போன்ற முட்­டாள்­த­ன­மான கருத்து ஏமாற்­றம் அளிக்­கிறது," என்று அதில் அவர் பதி­விட்­டுள்­ளார். இவரைப்போல இங்குள்ள பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.