ஜூரோங்கில் உள்ள ‘ஜெம்’, ‘வெஸ்ட்கேட்’ ஆகிய இரு கடைத்தொகுதிகள் இன்று (மே 23) முதல் இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும். ஜூன் 6ஆம் தேதி அவை மீண்டும் திறக்கப்படும்.
அங்கு கொவிட்-19 பரவலைத் தடுக்கவும் கடைத்தொகுதி வளாகத்தை முற்றிலுமாக சுத்தப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
“இவ்விரு கடைத்தொகுதிகளுக்கும் சென்றவர்களிடையே கிருமி பரவி வரக்கூடும் என்று எங்களது விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என்று அமைச்சு கூறியது.
வெஸ்ட்கேட் கடைத்தொகுதி வழியாக இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு பொதுமக்கள் வழக்கம்போல செல்ல முடியும். இவ்விரு கடைத்தொகுதிகளில் உள்ள அலுவலகக் கட்டடங்கள் திறந்திருக்கும்.
அண்மையில் பதிவான கிருமித்தொற்று பாதிப்புகளுக்கும் இந்தக் கடைத்தொகுதிகளுக்கும் தொடர்பு இருப்பதை சுகாதார அமைச்சு சுட்டியது. அந்த 10 பேரில் நால்வருக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடவடிக்கைகள் மூலம் தொற்று உறுதியானது.